Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதே இடம்.. அச்சுறுத்தும் தொப்பூர் ‘மரணப்பாதை”.. காண்போரை கதி கலங்கச் செய்யும் சிசிடிவி காட்சி!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து சிசிடிவி காட்சி, காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. இதே இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகவே அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (ஜனவரி 24) தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் மூன்று லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற வாகனங்களில் மோதியது. இதில் மற்றொரு லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Horrible accidents continue in same place in thoppur ghats

தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது. இதனால் அங்கு கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு லாரி நிலை தடுமாறி பாலத்தில் இருந்து மொத்தமாக கீழே விழுந்து நொறுங்கியது. லாரிக்கு இடையே சிக்கி கார் நசுங்கியது. இதில் கார்கள் மற்றும் ஒரு லாரி தீப்பிடித்து எரிந்தன.

இந்தக் கோர விபத்தில், காரில் பயணம் செய்த மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக லாரிகள், கண்டெய்னர்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீ தொலைவுக்கு அமைந்துள்ளது.

நீண்ட தூரத்தில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 1000 விபத்துகள் இப்பகுதியில் நடந்துள்ளன. தமழிகத்தில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக தொப்பூர் கணவாய் பகுதி உள்ளது.

இதே இடத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12 வாகனங்கள் அடுத்தடுத்து சங்கிலித் தொடர் போல மோதி விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் விபத்துகளை தவிர்க்க Elevated highway அமைக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+