போலீஸ்காரரின் கையை கடித்து வைத்த தவெக தொண்டர்.. தர்மபுரி போராட்டத்தில் அதிர்ச்சி. என்ன நடந்தது?
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புதிதாக மதுபான பார் திறக்கப்பட்டுள்ளது. இதனை முற்றுகையிட்டு இன்று தவெகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், தவெகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வேளையில் தவெக தொண்டர் ஒருவர் போலீசின் கையை கடித்த வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுவில் தக்காளி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு இந்த மார்க்கெட்டுக்கு பெண்கள்,குழந்தைகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தான் தற்போது அந்த பகுதியில் புதிதாக தனியார் மதுபான பார் தொடங்கப்பட்டது.

‛மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் புதிய பார் தொடங்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி அங்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அந்த தனியார் மதுபான பாரை மூட வேண்டும். இல்லாவிட்டால் மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று தவெகவினர் பெண்கள், இளைஞர்கள் என்று சுமார் 300க்கும் அதிகமானவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான பாரை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள் போலீசாரை தாண்டி மதுபான பாரை அடைந்தனர். அங்கு கதவு பூட்டப்பட்டு கிடந்தது. அதன் மீது ஏறியும், அதனை அசைத்து அசைத்து திறந்தும் உள்ளே சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். மதுபான பாரை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவதாக கூறினர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அரசு பஸ்களில் ஏற்றி அருகே உள்ள தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். முன்னதாக தவெக தொண்டர் ஒருவர் போலீஸ்காரரின் கையை கடித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது தவெகவினரை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், தவெகவினருக்கும் இடையே கடுமையாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த வேளையில் தவெகவை சேர்ந்த தொண்டர் ஒருவர் போலீஸ்காரரின் கையை கடித்து வைத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தவெகவினரின் இந்த போராட்டம் பாலக்கோடுவில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications