சின்னப்பையனுடன் சங்கீதா.. அதுவும் வாசற்படியிலயே.. அதிர்ந்த போலீஸ்.. கைக்குழந்தையை தவிக்கவிட்ட கொடுமை
போலீஸ் ஸ்டேஷனில் விஷம் குடித்து காதல் ஜோடி உயிரிழந்தது
தர்மபுரி: கட்டிய கணவனையும், கைக்குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிய சங்கீதாவின் வாழ்வு துயரத்தில் முடிந்துள்ளது..!
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்... இவர் ஒரு கட்டிட மேஸ்திரி. மனைவி பெயர் சங்கீதா.. 20 வயதாகிறது.
இவர்களுக்கு திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆகிறது.. இந்த தம்பதிக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி 2 பேருமே திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

ஊர்க்காரர்கள்
அதேபோல், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவரும் இங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் 20 வயதாகிறது... அதாவது சங்கீதாவின் கணவரும், சின்னபையனும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கி பழகி வந்துள்ளனர்... அதனால், சின்னபையன் அடிக்கடி இவர்களின் வீட்டிற்கும் வந்துள்ளார்... அப்போது, சங்கீதாவிடம் நெருங்கி பழங்கியுள்ளார். அது நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.

தலைமறைவு
சதீஷ்குமார் வீட்டில் இல்லாத சமயத்தில் சின்னபையனுடன் சங்கீதா தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.. ஒருநாள் இந்த விவகாரம் சதீஷ்குமாருக்கு தெரிந்துவிட்டதால், அவர் சங்கீதாவை கண்டித்துள்ளார்... இங்கே இருப்பதால்தானே உறவு தொடர்கிறது என்று நினைத்து, சங்கீதாவை அழைத்துச்சென்று, அவரது அம்மா வீட்டில் விட்டுள்ளார். ஆனால், அம்மா வீட்டில் இருந்தே எஸ்கேப் ஆனார் சங்கீதா.. தன்னுடைய 11 மாத குழந்தையை வீட்டிலேயே விட்டு விட்டு, சின்னபையனுடன் தலைமறைவானார்.

சின்னப்பையன்
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்துபோன சதீஷ்குமார், பென்னாகரம் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் அந்த கள்ளக்காதல் ஜோடியை தேட ஆரம்பித்தது.. போலீசார் தேடுவதை அறிந்த சங்கீதா, பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு வருவதாக உறவினர் ஆறுமுகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்படியே மறுநாள் கள்ளக்காதல் ஜோடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. அப்போது ஸ்டேஷன் வாசலிலேயே சின்னபையனும், சங்கீதாவும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

சிகிச்சை
இதனைக் கண்ட போலீசார் அவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்... அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷம் குடித்துள்ளாக கூறினர்.. பின்னர், 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை தந்து, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனாலும், எவ்வளவோ சிகிச்சை தர முயன்றும், இருவரையுமே டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை.. கள்ளக்காதல் ஜோடி போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து உயிரை விட்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications