கொடைக்கானல் அருகே பரிதாபம்... கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொடைக்கானலின் மங்கலம் கொம்பில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமனூர் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை இருந்தவர் கணேஷன். இவர், சிறந்த ஊராட்சிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

3 Peolpes were killed in a gas cylinder exploding near Kodaikanal

கணேஷன், மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகள் விஷ்ணுபிரியா ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்துள்ளனர். மகள் விஷ்ணுபிரியா திண்டுக்கல் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இரவு முழுவதும் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியிருந்ததாகவும், காலையில் ரூம் ஹீட்டரை பயன்படுத்திய போது, சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+