பலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: நாட்டில் பலாத்கார சம்பவங்கள் காலம் காலமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சீனிவாசன் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சைகளாகின. அண்மையில் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அழைத்து காலணியை கழற்றிவிட சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நாட்டில் பலாத்கார சம்பவங்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறதுதான். அதேபோல் ரூ5 லட்சத்தை ரூ10 கோடியாக மாற்றுவது என்பதும் நடைபெற்று வருவதுதான்.
மத்திய பாஜக அரசை நாங்கள் ஆதரித்ததால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் ஊடகங்கள் பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கிறோம் என எழுதுகிறார்கள். தமிழகத்தில் இப்போதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் எங்கேயாவது குண்டு காயம் ஏற்பட்டு யாரும் இறந்தாங்கன்னு செய்தி வருகிறதா? அஸ்ஸாம் மாநிலத்துக்கு யார் யாரெல்லாம் வந்துள்ளனர்? என்பதை அறிவதற்கான அடையாளச் சீட்டாகதான் குடியுரிமை சட்டத்தை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ரேசன் கார்டு கொடுக்கத்தான் குடியுரிமை சட்டம். இதில் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சீனாவின் அதிபர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அப்போது சீனா அதிபரும் பிரதமர் மோடியும் தமிழக அரசை பாராட்டினர். முதல்வர் எடப்பாடி அரசு, தமிழக மக்களை அன்பாகப் பார்த்து கொள்வதாக கூறினார்கள். இப்படி ஒரு மாநிலத்தையே பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.
முதல்வரையும் துணை முதல்வரையும் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார். நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications