திண்டுக்கல் தங்க நகை அடகு கடையில் ட்விஸ்ட்.. ஒரே நபர்.. எத்தனை முறை சார்.. போலீசும் பாவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒடிசா மாநில வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்து பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைத்தனர். அவர் உணவு இல்லாமல் பசியோடு சுற்றியுள்ளார். அவருக்கு உணவு வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால் அடகு கடை வாசலில் படுத்துள்ளார். அப்போதும் சந்தேகத்தில் பொதுமக்கள் அவரை விரட்டினார்கள். இதனால் அவர் எடுத்த முடிவு போலீசாரை ஆடிப்போக வைத்துள்ளது.
மக்கள் வடமாநிலத்தவர் சந்தேகத்திற்கு இடமாக சாலைகளில் சுற்றினால் சிலநேரங்களில் அடிக்கிறார். திருட வந்ததாக நினைத்து விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல்லில் வேலையில்லாமல், பசியால் வாடிய ஒடிசா நபரை இரண்டு முறை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக வடமாநில வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து சாணார்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோவிந்த கல்சா (வயது 35) என்பதும், வேலை தேடி திருப்பூருக்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
திருப்பூரில் கோவிந்த கலசாவிற்கு வேலை கிடைக்காததால் பேருந்தில் திண்டுக்கல் வந்து, பின்னர் கோணப்பட்டி பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. அங்கு வேலை மற்றும் உணவு இல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். கடந்த ஜூன் 1ம் தேதி அவருக்கு சாணார்பட்டி போலீசார் உணவு வாங்கி கொடுத்து பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அவர் ஊருக்கு செல்லாமல் அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அடகு கடை முன் இரவு படுத்துள்ளார்.நேற்று காலை அவரைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருட வந்ததாக நினைத்து விரட்டியுள்ளார்கள்.
இதனால் பயந்து போன அந்த நபர் அவர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் சாணார்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார் அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அவர், போலீஸ் நிலையத்தின் மாடிப்படி வழியாக மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கே நின்று கொண்டு கீழே குதிக்க போவதாக மிரட்டினாா். போலீசார் அவரை கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு பெரிய தார்ப்பாயை விரித்து பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். ஒரு வழியாக அந்த நபரிடம் இந்தியில் பேசி கீழே இறங்கி வரச்செய்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து, கையோடு ஈரோடு ரயிலில் ஏற்றிவிட்டு, அங்குள்ள காவலர்கள் உதவியுடன் ஒடிசா செல்லும் ரயிலில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
-
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
திண்டுக்கல்லில் கல்யாண மண்டபத்தில் ஓடிப்போன மணமக்கள்.. ஒரு போன் காலால் ட்விஸ்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications