அருணாச்சல பிரதேச இளைஞரை கடத்தி கரண்ட் ஷாக் கொடுத்து சீன ராணுவம் அட்டூழியம்!
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்துக்குள் ஊடுருவி 17 வயது இளைஞரை கடத்திச் சென்று கரண்ட் ஷாக் கொடுத்து சீன ராணுவம் சித்ரவதை செய்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக தொடர்ந்து உரிமை கோரி வருகிறது சீனா. இதற்கு ஒவ்வொரு முறையும் மத்திய அரசு பதிலடி தந்தும் வருகிறது.

நாட்டின் மத்திய அமைச்சர்கள் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றாலே சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அண்மையில் கூட அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை தன்னிச்சையாக சீனா மாற்றியது.
இந்நிலையில் கடந்த மாதம் 17 வயது இளைஞர் ஒருவரை சீன ராணுவம் கடத்திச் சென்றது. நமது ராணுவம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒருவாரம் கழித்து அந்த இளைஞரை சீனா விடுவித்தது. சீனாவால் விடுவிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞர் பெற்றோரிடம் நேற்று சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பான நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய இளைஞரின் பெற்றோர், சீன ராணுவம் மகனை கடத்திச் சென்றது. கடத்திச் செல்லும் போது கைகளையும் கண்களையும் கட்டியிருக்கின்றனர். ஒருவார காலமாக இதேநிலைமையில்தான் மகனை வைத்திருந்தனர். மகனை அடித்து உதைத்ததுடன் பின்பகுதியில் கரண்ட் ஷாக்கும் கொடுத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மனதளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மகன் இருக்கிறார் என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 5 இளைஞர்களை சீனா ராணுவம் கடத்திச் சென்றது. இதேபோல ஒரு வாரம் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பின்னரே சீனா விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
-
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications