"பொன்னியின் செல்வன்".. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த "செம டைமிங்" கிஃப்ட்!
திண்டுக்கல்: திண்டுக்கல் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திலிருந்து வருகை தந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளபட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இடத்திற்குச் சென்றார்.

திண்டுக்கல்லில் மோடி
ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மு.க. ஸ்டாலின் பரிசு
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு வரும் வடமாநில தலைவர்களை வரவேற்கும் போது, தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும், திராவிட சித்தாந்தங்களை எடுத்துரைக்கும் வகையிலும் புத்தகங்களை பரிசாக வழங்குவதை வழக்காக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருக்குறளை வழங்கியுள்ளார். இதனால் இம்முறை என்ன புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறித்த ஆர்வம் எழுந்தது.

பொன்னியின் செல்வன்
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்து வரவேற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் நெஞ்சங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறது. சோழ பேரரசின் எழுச்சியையும், ராஜராஜ சோழனின் நிர்வாகத்தையும், ஆதித்த கரிகாலன் கொலையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலை முதல்வர் ஸ்டாலின் பரிசாக வழங்கியுள்ளார்.

மீண்டும் ஆர்வம்
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அண்மையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியாகியது. இதனால் கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சுகள் அனைத்து தரப்பிலும் அதிகமாக இருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் நாவலை முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு பரிசாக வழங்கியுள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications