ஆட்சியர் சரவணனின் சதி.. பகீர் புகார் சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி! பதில் சொல்லாமல் மழுப்பிய கலெக்டர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்திருக்கிறது எனவும், இதற்கு திண்டுக்கல் ஆட்சியர் தான் சதி செய்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக வந்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் திண்டுக்கல் ஆட்சியர் சரவணன். ஆனால், அமைச்சரின் புகார் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக பேசிய அவர்," திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
சின்னாளப்பட்டி பேரூராட்சியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 7,227 வாக்காளர்களின் பெயர்களில் 'இடம்பெயர்ந்துவிட்டார்கள்' (Shifted) எனக் குறிப்பிடப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சிறப்புச் சேர்க்கைப் பணி டிசம்பர் இரண்டாம் வாரம் வரை தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக இப்பணியை வட்டாட்சியர் முடித்துள்ளார். 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16,800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளது.
சின்னாளப்பட்டி பகுதியில் பலர் வணிக காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள் என்பதால் சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து வாக்காளர் சேர்க்கை பணிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சேர்க்கைப் பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால், இன்று வந்த பலரும் வாக்காளராகச் சேர முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரிய சதி நடந்துள்ளதற்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக வந்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் திண்டுக்கல் ஆட்சியர் சரவணன். ஆனால், அமைச்சரின் புகார் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார். திண்டுக்கல்லில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ஆத்தூர் தொகுதியில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெறவில்லை என அமைச்சர் குற்றம் சாட்டியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் முடித்து விட்டோம் என அதிகாரிகள் கூறினர். இன்று காலை அனைவரையும் வாங்க சொல்லி உள்ளோம் என்றார்.
ஆத்தூர் தாசில்தார் பிஎல்ஓ களிடம் இருந்து வாக்காளர்கள் ஷிப்டிங் என படிவத்தை பூர்த்தி செய்து வாங்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, அப்படி சொல்லவில்லை பணிகளை வேகமாக முடிக்க சொல்லி சொல்லி இருப்பார் அதனை மீண்டும் மறுஆய்வு செய்ய சொல்லி உள்ளோம். அரசியல் வேண்டாம் என மழுப்பலாக பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications