Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் சிறுமலையில் சிவன் கோயில் அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரியும் காடுகள்.. பக்தர்கள் கவலை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், செடிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இவற்றை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சிறுமலை சிவன்கோயில் அருகே ஏற்பட்ட தீ விபத்தை கண்ட பக்தர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து அதனை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொடைக்கானல் மற்றும் அதன் அருகே உள்ள மலை பகுதிகளில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பாகவே நடக்கிறது.

திண்டுக்கல் மாநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் சிறுமலை அமைந்துள்ளது. சிறுமலை என்பது பெயருக்கு தகுந்தாற்போல் சிறிய மலை தான்..ஆனால் அடர்ந்த வனப்பகுதியாகும். கொடைக்கானல் போல் இருக்காது என்றாலும், இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் கால நிலை சுற்றுலாவிற்கு ஏற்றதாக இருக்கும்.

Forest fire breaks out in the middle of the night in the forests near the Shiva temple in Sirumalai Dindigul

பிப்ரவரி பிற்பாதி வரையிலும் இங்கு கிளைமேட் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு மேல் வெயில் ஆரம்பித்துவிடும். என்னதான் வெயில் அடித்தாலும் மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் வெயிலே சிறுமலையில் தெரியாது.. பல விதமான செடிகளும், மரங்களும் உள்ளன. ஏராளமான வன விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலை வாழைப் பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கும். சிறுமலை வாழைக்கு வெளியூர்களில் நல்ல மவுசு உண்டு.

சிறுமலை மற்றும் பக்கத்தில் உள்ள கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுவாக பிப்ரவரி பிற்பாதிக்கு பிறகு வறட்சி அதிகமாக இருக்கும். தற்போது வெயில் அதிகமாக உள்ளது.இதனால் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் காட்டுத்தீ பரவி, வனப்பகுதி கருகுவது வாடிக்கையாக உள்ளது.

கொடைக்கானல் - பழநி ரோடு மேல்பள்ளம் வனப்பகுதியில் கடந்த 10 நாட்கள் முன்பு திடீரென காட்டுத்தீ பற்றி, மளமளவென பரவியதால், ஏராளமான வனப்பகுதிகள் தீக்கிரையாகின. அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர், தீயணைப்புதுறையினர் தீயை கட்டுப்படுத்தினார்கள். இதேபோல் சில நாட்கள் முன்பு கொடைக்கானல் கார்மேல்புரம் குடியிருப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலப்பரப்பில் காட்டுத்தீ பிடித்தது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சிறுமலையில் உள்ள சிவன் கோவில் பகுதியில் இன்று அதிகாலை காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சிவராத்திரி கொண்டாட சென்ற பக்தர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், வனப்பகுதிகளை காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+