ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளித்த போது 4 இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீரில் மூழ்கிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரது உடல் தேடப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேல் தளையூத்து அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவத்தில், அவர்கள் உற்சாகமாக அருவிக்கு சென்ற கடைசி வீடியோ வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் அனுமதியின்றிச் சென்றதாக தெரிகிறது. இவர்கள் அங்கிருந்த அருவி ஒன்றில் குளித்தனர். அப்போது, ஆதில், சதாம் உசேன், ஆயாஸ் மற்றும் பாரூக் ஆகிய 4 இளைஞர்கள் அருவியில் மூழ்கினர்.
இதனால் பதறிய மற்ற நண்பர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் நீரில் மூழ்கியவர்களை தேடினர்.

நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.
இதில் முதற்கட்டமாக மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மேலும் ஒருவரை தேடும் பணி தற்போதும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் அருவிக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தங்களது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே, அதுதான் தங்களின் கடைசிப் பயணம் எனத் தெரியாமல் உற்சாகமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதை கண்ட இறந்தவர்களின் நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியில்லாமல் காட்டு பகுதி, நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்தாலும் ஜாலிக்காக இது போல் சென்று உயிரை மாய்த்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போல் ஆபத்தான இடங்களுக்கு அந்த இடத்தை பற்றி தெரிந்த, அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரு நபரை அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான் பலரது அறிவுரையாக இருக்கிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications