பிரதமர் மோடி வருகையின் போது சதித்திட்டம்? எஸ்பிசிஐடி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்! அலர்ட் ஆகும் காவல்துறை
திண்டுக்கல் : திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறை உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் பிரதமரோடு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பட்டமளிப்பு விழா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் அதன்பிறகு தனி விமான மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் அருகே அம்பாத்துறையில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். அங்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர், அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி
தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு காரில் செல்லும் பிரதமர் 3 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகிறார். இது மட்டும் அல்லாமல் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். அதன் பின் மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்லும் பிரதமர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் சென்று பின்னர் தனி விமான மூலம் டெல்லி செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு
தற்பொழுது பிரதமர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிஜிபி அறிவுறுத்தலின் பேரில் ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் திண்டுக்கல் காந்திகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னாளப்பட்டி, அம்பாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாகனங்கள் செல்லவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உளவுத்துறை சுற்றறிக்கை
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என எஸ்பிசிஐடி எனப்படும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உளவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தலைவர்களுக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கள், மாலைகள் உள்ளிட்ட பொருட்களை தீவிர சோதனைக்கு உட்படுத்த காவல்துறையினருக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரதமரை வரவேற்க செல்லும் முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சிக்கு வரும் செய்தியாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications