நெருங்கும் தேர்தல்.. திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து அதிரடி மாற்றம்.. வைரமுத்து நியமனம்
திண்டுக்கல்: திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ஜோதிமுத்து அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உள்ளது. பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் லோக்சபா தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியின் வேட்பாளராக திலகபாமாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் திடீரென்று திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ஜோதி முத்து திடீரென்று அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛ திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ஜோதி முத்து இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய செயலாளராக வைரமுத்து இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜோதி முத்துவின் பதவி பறிக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications