60 வயது முதியவரின் ஓரின சேர்க்கை.. கடைசியில் ஒரு கொடூர கொலை!
பழனியில் ரயில்வே கேட் - கீப்பர் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்.
பழநி: ஓரின சேர்க்கையால்தான் இது நடந்திருக்குமோ என்று பழநி போலீசார் ஒரு கொலை பற்றி துரிதமான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
பழநி புதுநகர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 60 வயதாகிறது. ஆனால் கல்யாணம் ஆகவில்லை. பழநி ரயில்வேயில் கேபிள் மேனாக வேலை பார்க்கிறார். அதனால் ரயில்வே குடியிருப்பில் முருகேசன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முருகேசன் வேலைக்கு செல்ல காணோம். லீவு பற்றின தகவலையும் சொல்லவில்லை. போனும் எடுக்கவில்லை. அதனால் கூட வேலை பார்ப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நேராக முருகேசன் வீட்டுக்கே சென்று விட்டார்கள்.

கதவை உடைத்தனர்
அப்போது வீட்டு அருகில் போவதற்கு முன்னாடியே நாற்றம் வீச தொடங்கியது. அதனால் வீட்டு அருகில் செல்லவே பயந்தார்கள், தயங்கினார்கள். கடைசி வரை வீட்டுக்கு போகாமலேயே டவுன் போலீசாருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள். போலீசாரும் விரைந்து வந்து முருகேசன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார்கள்.

கல்லை போட்டு கொலை
அங்கே முருகேசன் தலையில் யாரோ அம்மி கல்லை போட்டு கொன்றிருந்தார்கள். அதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையில் இறங்கினர். இறந்துபோன முருகேசனுக்கு கல்யாணம், குழந்தை என்று இல்லை என்பதால் இது குடும்ப தகராறு இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

ஓரின சேர்க்கையாளர்
ஆனால் முருகேசன் ஓரின சேர்க்கையாளர் என்பது தெரியவந்துள்ளது. இந்த பழக்கம் இவருக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அதனால் வீட்டுக்கு நிறைய ஆண்களை அழைத்து வந்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படி

தீவிர விசாரணை
ஆண் ஒருவரை வீட்டுக்கு வரவழைத்து ஓரின சேர்க்கையில் ஈடுபடும்போதுதான் தகராறு ஆகி, தலையில் கொல்லை போட்டு கொலையும் செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இது சம்பந்தமாக மேலும் தீவிரமான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications