அள்ள அள்ள தங்கம்.. பழனி முருகன் கோவில் உண்டியலை திறந்தால்.. கொட்டிய கோடிகள்
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கை பணம் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும். அப்படி எண்ணப்பட்டது. இதில் கடந்த மாதம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.75 கோடி கிடைத்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி மலை முருகன் சிலை உலகிலேயே தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது. இது கல்லால் ஆனது அல்ல; போகர் என்ற சித்தரால் 9 வகையான விஷப் பொருட்களை (நவபாஷாணங்கள்) கலந்து செய்யப்பட்ட ஒரு ரசாயனக் கலவையாகும். இந்தச் சிலையிலிருந்து வழியும் அபிஷேகப் பொருட்கள் (பால், பஞ்சாமிர்தம்) மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது.

பொதுவாகக் கோவில்களில் தெய்வங்கள் கிழக்கு நோக்கித்தான் இருக்கும். ஆனால், பழனி தண்டாயுதபாணி மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். சேர நாட்டை (கேரளா) பார்த்தபடி அவர் அமர்ந்திருப்பதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. அதனால்தான் கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளாவில் இருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதில் இருந்தும் முருக பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகிறார்கள். சபரிமலை சீசனில் ஐயப்பனை பார்க்கவரும் பக்தர்கள் பழனிக்கு செல்ல மறப்பது இல்லை. அந்த அளவிற்கு பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேலும் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம் கோவில் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது ரூ.3 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரத்து 486. தங்கம் 524 கிராம், வெள்ளி 14003 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 578-ம் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 20 லட்சத்து 87 ஆயிரத்து 687-ம், தங்கம் 171 கிராம், வெள்ளி 3,976 கிராம், வெளிநாட்டு கரன்சி 263-ம் கிடைத்தது. 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிறைவு பெற்றது. அதில் மொத்தம் ரூ.5 கோடியே 80 லட்சத்து 86 ஆயிரத்து 173-ம், தங்கம் 695 கிராம், வெள்ளி 17,979 கிராம், வெளிநாட்டு கரன்சி 841-ம் கிடைத்தது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications