அள்ள அள்ள தங்கம்.. பழனி முருகன் கோவில் உண்டியலை திறந்தால்.. கொட்டிய கோடிகள்
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கை பணம் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும். அப்படி எண்ணப்பட்டது. இதில் கடந்த மாதம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.75 கோடி கிடைத்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி மலை முருகன் சிலை உலகிலேயே தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது. இது கல்லால் ஆனது அல்ல; போகர் என்ற சித்தரால் 9 வகையான விஷப் பொருட்களை (நவபாஷாணங்கள்) கலந்து செய்யப்பட்ட ஒரு ரசாயனக் கலவையாகும். இந்தச் சிலையிலிருந்து வழியும் அபிஷேகப் பொருட்கள் (பால், பஞ்சாமிர்தம்) மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது.

பொதுவாகக் கோவில்களில் தெய்வங்கள் கிழக்கு நோக்கித்தான் இருக்கும். ஆனால், பழனி தண்டாயுதபாணி மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். சேர நாட்டை (கேரளா) பார்த்தபடி அவர் அமர்ந்திருப்பதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. அதனால்தான் கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளாவில் இருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதில் இருந்தும் முருக பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகிறார்கள். சபரிமலை சீசனில் ஐயப்பனை பார்க்கவரும் பக்தர்கள் பழனிக்கு செல்ல மறப்பது இல்லை. அந்த அளவிற்கு பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேலும் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம் கோவில் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது ரூ.3 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரத்து 486. தங்கம் 524 கிராம், வெள்ளி 14003 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 578-ம் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 20 லட்சத்து 87 ஆயிரத்து 687-ம், தங்கம் 171 கிராம், வெள்ளி 3,976 கிராம், வெளிநாட்டு கரன்சி 263-ம் கிடைத்தது. 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிறைவு பெற்றது. அதில் மொத்தம் ரூ.5 கோடியே 80 லட்சத்து 86 ஆயிரத்து 173-ம், தங்கம் 695 கிராம், வெள்ளி 17,979 கிராம், வெளிநாட்டு கரன்சி 841-ம் கிடைத்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications