அள்ள அள்ள தங்கம்.. பழனி முருகன் கோவில் உண்டியலை திறந்தால்.. கொட்டிய கோடிகள்
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கை பணம் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும். அப்படி எண்ணப்பட்டது. இதில் கடந்த மாதம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.75 கோடி கிடைத்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி மலை முருகன் சிலை உலகிலேயே தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது. இது கல்லால் ஆனது அல்ல; போகர் என்ற சித்தரால் 9 வகையான விஷப் பொருட்களை (நவபாஷாணங்கள்) கலந்து செய்யப்பட்ட ஒரு ரசாயனக் கலவையாகும். இந்தச் சிலையிலிருந்து வழியும் அபிஷேகப் பொருட்கள் (பால், பஞ்சாமிர்தம்) மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது.

பொதுவாகக் கோவில்களில் தெய்வங்கள் கிழக்கு நோக்கித்தான் இருக்கும். ஆனால், பழனி தண்டாயுதபாணி மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். சேர நாட்டை (கேரளா) பார்த்தபடி அவர் அமர்ந்திருப்பதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. அதனால்தான் கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளாவில் இருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதில் இருந்தும் முருக பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகிறார்கள். சபரிமலை சீசனில் ஐயப்பனை பார்க்கவரும் பக்தர்கள் பழனிக்கு செல்ல மறப்பது இல்லை. அந்த அளவிற்கு பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேலும் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம் கோவில் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது ரூ.3 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரத்து 486. தங்கம் 524 கிராம், வெள்ளி 14003 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 578-ம் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 20 லட்சத்து 87 ஆயிரத்து 687-ம், தங்கம் 171 கிராம், வெள்ளி 3,976 கிராம், வெளிநாட்டு கரன்சி 263-ம் கிடைத்தது. 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிறைவு பெற்றது. அதில் மொத்தம் ரூ.5 கோடியே 80 லட்சத்து 86 ஆயிரத்து 173-ம், தங்கம் 695 கிராம், வெள்ளி 17,979 கிராம், வெளிநாட்டு கரன்சி 841-ம் கிடைத்தது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications