கோல்டு வின்னர் கம்பெனியில் 1,600 டன் ஆயிலை ஆட்டைய போட்ட உதவி மேனேஜர்கள்- காப்பு கட்டியது போலீஸ்!
பழனி: கோல்டு வின்னர் எண்ணெய் உற்பத்தி செய்யும் காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனத்தில் ரூ18.5 கோடி மதிப்பிலான 1,600 டன் சமையல் எண்ணெய்யை திருடி வெளிச் சந்தையில் விற்பனை செய்ததாக 2 உதவி மேலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்தில் காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல எண்ணெய் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காளீஸ்வரி ஆயில்
மிகவும் பிரபலமான கோல்டு வின்னர், ஸ்ரீகோல்டு, எல்டியா தேங்காய் எண்ணெய் ஆகியவை காளீஸ்வரி குழுமத்தின் தயாரிப்பு ஆகும். இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

உதவி மேலாளர்கள்
இந்த நிலையில், திண்டுக்கல், தாழையூத்தில் உள்ள நிறுவனத்தில் பழனியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 51) மற்றும் கரண்குமார் (வயது 31) ஆகிய 2 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருமே அந்த நிறுவனத்தின் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றியதால் நிறுவனம் இவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.

சமையல் எண்ணெய் இருட்டு
அந்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட இவர்கள் இருவரும், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இந்த சதித்திட்டத்தின்படி, கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக இருவரும் பொய்யான கணக்ககுகளை நிர்வாகத்திடம் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இதைப் பயன்படுத்தி, ஆலைக்கு சொந்தமான சமையல் எண்ணெயை யாருக்கும் தெரியாமல் திருடி வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

1600 டன், ரூ18.5 கோடி
இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை சுமார் 1,600 டன் சமையல் எண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வெளிச்சந்தையில் இதுவரை விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். இவர்கள் திருடி விற்பனை செய்த சமையல் எண்ணெயின் மதிப்பு ரூபாய் 18.5 கோடி ஆகும். இவர்களது திருட்டு மோசடி வேலையை அறிந்த காளீஸ்வரி நிர்வாகம் அதிர்ந்து போனது. பின்னர் போலீசில் புகார் கொடுக்க தற்போது 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications