Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் குடிசையில் தாத்தா உடன் தூங்கிய 5 வயது சிறுவன்.. அங்கேயே எமனாக பதுங்கியிருந்த பாம்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சுருட்டை என்று அழைக்கப்படும் கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் நாகப்பாம்பு போனற்வை இரவில் தான் உணவு தேடி வருகின்றன. கிராமங்களில் காட்டுப்பகுதி இருக்கும் என்பதால் வீடுகளின் வாசல் வழியாகவே செல்லும். அங்கு பாய் விரித்து இரவு நேரத்தில் சிலர் உறங்குகிறார்கள்.. அப்படித்தான் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, தாத்தாவுடன் குடிசையில் தூங்கிய 5 வயது சிறுவனுக்கு எமனாக மாறியிருக்கிறது. பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் காரணமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான பாம்புகள் இருந்தாலும் நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் என்ற மூன்று வகை பாம்புகளே விஷம் நிறைந்தவை.. இவை தான் பாம்புக்கடி உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன. இதில் கண்ணாடி விரியனும், கட்டு விரியனும் இரவில் உணவு தேட வருகின்றன. அப்படி வரும் போது, மனிதர்களை தாக்குகின்றன. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்..

What did the cobra do to kannan who was lying at the door of his house in dindigul

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருக்கிறது வேலகவுண்டன்பட்டி. இந்த கிராமத்தில் 43 வயதாகும் பீமராஜ் கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவருடைய மனைவி ரேவதி (40). இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் கண்ணன் என்ற மகனும், 2 வயதில் சந்தானம் என்ற மகனும் உள்ளனர். இதில், கண்ணன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான். செம்பட்டி அருகே வீ.கூத்தம்பட்டியில் ரேவதியின் தந்தை தங்கவேலின் (60 வயது) வீடு இருக்கிறது. தங்கவேல் தனது வீட்டை இடித்துவிட்டு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் வீட்டின் அருகே குடிசை அமைத்து, அதில் தங்கவேல் தங்கி இருக்கிறார்.

இந்தநிலையில் குழந்தை கண்ணன், தனது தாத்தா வீட்டுக்கு சென்றான். நேற்று முன்தினம் இரவு தங்கவேல், கண்ணன் ஆகியோர் குடிசை வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்கள். நள்ளிரவில் திடீரென கண்ணன் அலறினான். அந்த சத்தம் கேட்டு தங்கவேல் திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். சிறிதுநேரத்தில் கண்ணனின் வாயில் இருந்து நுரை தள்ளியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேல் கண்ணனின் தந்தை பீமராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவரும் அங்கு விரைந்தார்.

பின்னர் அவர்கள், கண்ணனை, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கொடிய விஷம் கொண்ட பாம்பு கண்ணனை கடித்திருப்பதாக கூறினார்க்ள, தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கண்ணன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் பீமராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிசைக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+