ஒட்டன்சத்திரம் டூ திண்டுக்கல் சென்ற திருச்சி பஸ்.. நள்ளிரவு 1 மணி.. பின் சீட்டில் பயணி இருந்த கோலம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து திருச்சிக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 22 பயணிகள் இருந்தனர். பஸ் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்ததும் அதில் சுமார் 30 வயதுடைய வாலிபர் ஏறி உள்ளார். அவர் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை தவிர பின் இருக்கையில் யாருமில்லை. மேலும் அவருக்கு அடுத்து யாரும் பேருந்தில் ஏறவில்லை. இந்நிலையில் பேருந்து ரெட்டியார்சத்திரம் அருகே சென்ற போது அந்த பயணி இருந்த கோலம் பயணிகளை ஆடிப்போக வைத்துள்ளது.
பேருந்துகளில் செல்லும் போது ஒருவர் அப்படி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அந்த அளவிற்கு திண்டுக்கல் மாவட்டத்தையே அதிரவைக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. ஒடும் பேருந்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரை மீட்டுள்ளனர். என்ன நடந்தது... யார் என்பதை பார்ப்போம்.

ஒட்டன்சத்திரத்தில் ஏறிய பயணி
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து திருச்சிக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை 60 வயதாகும் ஓட்டுநர் ராமச்சந்திரன் ஓட்டினார். 38 வயதாகும் கண்டக்டராக செந்தமிழ்ச்செல்வன் அந்த பேருந்தில் பணியாற்றினார். திருச்சி நோக்கி சென்ற அந்த பேருந்தல் சுமார் 22 பயணிகள் இருந்தனர். பேருந்து பழனியை கடந்து வந்தது. ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்ததும் அதில் சுமார் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் ஏறினார். அந்த வாலிபர் திண்டுக்கல் செல்வதற்கு கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு பஸ்சில் அதன் பிறகு பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பின் இருக்கையில் அந்த வாலிபர் மட்டுமே அமர்ந்து இருந்தார்.
நள்ளிரவில் சத்தம்
கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை கொடுத்து விட்டு டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். ஒட்டன்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பஸ் திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. பஸ்சின் உள்பகுதியில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. சுமார் 20 நிமிடம் கழித்து, நள்ளிரவு 1 மணி அளவில் ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியார்சத்திரம் என்னுமிடத்தில் பஸ் வந்தது. பின் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டது.
பேருந்தில் பயணி இருந்த கோலம்
உடனே கண்டக்டர் செந்தமிழ்ச்செல்வன் எழுந்து சென்று என்ன சத்தம் என்று போய் பார்த்தார். அங்கு பின் வாசல் படிக்கட்டு அருகே இருந்த கம்பியில் வேட்டியால் அந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது.. இதைப் பார்த்த கண்டக்டரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணை
உடனே ரெட்டியார்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?, எதற்காக தற்கொலை செய்து கொண்டார், என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் திண்டுககல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications