Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 வருட சாபம்.. இந்திய அணியில் தலைதூக்கிய அதே பழைய"பிரச்சனை".. ரோஹித் இன்று என்ன செய்வார்?

Subscribe to Oneindia Tamil

துபாய்: 3 வருட பழைய பிரச்சனை ஒன்று இந்திய அணியில் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இதை ரோஹித் எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதில் இருந்தே சரியான ஆல் ரவுண்டர் இல்லாத பிரச்சனை நிலவி வந்தது. கடந்த சில வருடங்களாக இந்த பிரச்சனை உச்சத்தில் இருந்தது.

முக்கியமாக கடந்த 2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்த பிரச்சனை தலை தூக்கியது. அப்போது வாய்ப்பு பெற்ற விஜய் சங்கர் மிக மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின் கடந்த வருடம் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா சரியான பார்மில் இல்லை.

நல்ல காம்போ

நல்ல காம்போ

இந்த நிலையில்தான் இந்திய அணியில் கடந்த 4-5 மாதங்களாக வீரர்கள் பார்மிற்கு திரும்பினர். ஜடேஜா நல்ல பார்மில் இருந்தார். அதேபோல் ஹர்திக் பாண்டியா பார்மிற்கு திரும்பினார். இதனால் இரண்டு பேருமே அணியில் சிறப்பாக ஆடினார்கள். இரண்டு பேருமே அணிக்கு முக்கியமான மேட்ச் வின்னர்களாக மாறினார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறவும் இது உதவியாக இருந்தது.

 என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்த நிலையில்தான் இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகி உள்ளார். காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணிக்குள் வந்துள்ளார். பெரும்பாலும் இன்று பிளேயிங் லெவனில் அஸ்வின் ஜடேஜா இடத்தில் ஆட வாய்ப்பு உள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் அக்ஸர் பட்டேல் ஜடேஜா அளவிற்கு சிறப்பான பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் அவரை விட நல்ல பவுலர்.

அஸ்வின்

அஸ்வின்

அதேபோல் அஸ்வினும் ஜடேஜா அளவிற்கு சிறப்பான பேட்ஸ்மேன் இல்லை. ஆனால் அவரை விட நல்ல பவுலர். இவர்கள் இருவரில் யார் இந்திய அணிக்குள் வந்தாலும் அணியின் பவுலிங் பலம் பெரும். ஆனால் பேட்டிங் பலம் கொஞ்சம் குறையும். இதுதான் இந்திய அணிக்கு தற்போது சிக்கலாகி உள்ளது. 2019ல் இந்திய அணிக்கு ஏற்பட்ட பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது. சாபம் போல இந்த விஷயம் இந்திய அணியை தொடருகிறது.

 ரோஹித் முடிவு

ரோஹித் முடிவு

இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா யாரை அணியில் தேர்வு செய்வார் என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்ப போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக இந்திய அணி கூடுதல் பவுலர்களோடு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் இன்று இந்திய அணியில் ரோஹித், கே. எல் ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் / பண்ட், புவனேஷ்வர் குமார், சாஹல், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் இன்று இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+