3 வருட சாபம்.. இந்திய அணியில் தலைதூக்கிய அதே பழைய"பிரச்சனை".. ரோஹித் இன்று என்ன செய்வார்?
துபாய்: 3 வருட பழைய பிரச்சனை ஒன்று இந்திய அணியில் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இதை ரோஹித் எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதில் இருந்தே சரியான ஆல் ரவுண்டர் இல்லாத பிரச்சனை நிலவி வந்தது. கடந்த சில வருடங்களாக இந்த பிரச்சனை உச்சத்தில் இருந்தது.
முக்கியமாக கடந்த 2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்த பிரச்சனை தலை தூக்கியது. அப்போது வாய்ப்பு பெற்ற விஜய் சங்கர் மிக மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின் கடந்த வருடம் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா சரியான பார்மில் இல்லை.

நல்ல காம்போ
இந்த நிலையில்தான் இந்திய அணியில் கடந்த 4-5 மாதங்களாக வீரர்கள் பார்மிற்கு திரும்பினர். ஜடேஜா நல்ல பார்மில் இருந்தார். அதேபோல் ஹர்திக் பாண்டியா பார்மிற்கு திரும்பினார். இதனால் இரண்டு பேருமே அணியில் சிறப்பாக ஆடினார்கள். இரண்டு பேருமே அணிக்கு முக்கியமான மேட்ச் வின்னர்களாக மாறினார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறவும் இது உதவியாக இருந்தது.

என்ன சிக்கல்
இந்த நிலையில்தான் இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகி உள்ளார். காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணிக்குள் வந்துள்ளார். பெரும்பாலும் இன்று பிளேயிங் லெவனில் அஸ்வின் ஜடேஜா இடத்தில் ஆட வாய்ப்பு உள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் அக்ஸர் பட்டேல் ஜடேஜா அளவிற்கு சிறப்பான பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் அவரை விட நல்ல பவுலர்.

அஸ்வின்
அதேபோல் அஸ்வினும் ஜடேஜா அளவிற்கு சிறப்பான பேட்ஸ்மேன் இல்லை. ஆனால் அவரை விட நல்ல பவுலர். இவர்கள் இருவரில் யார் இந்திய அணிக்குள் வந்தாலும் அணியின் பவுலிங் பலம் பெரும். ஆனால் பேட்டிங் பலம் கொஞ்சம் குறையும். இதுதான் இந்திய அணிக்கு தற்போது சிக்கலாகி உள்ளது. 2019ல் இந்திய அணிக்கு ஏற்பட்ட பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது. சாபம் போல இந்த விஷயம் இந்திய அணியை தொடருகிறது.

ரோஹித் முடிவு
இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா யாரை அணியில் தேர்வு செய்வார் என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்ப போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக இந்திய அணி கூடுதல் பவுலர்களோடு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் இன்று இந்திய அணியில் ரோஹித், கே. எல் ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் / பண்ட், புவனேஷ்வர் குமார், சாஹல், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் இன்று இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications