Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுதி அரேபியாவை இதில் அடிச்சிக்கவே முடியாது.. புர்ஜ் கலீஃபாவை ஓரம் கட்ட.. ஒருத்தன் வந்துட்டான்.. செம

Subscribe to Oneindia Tamil

துபாய்: உலகின் பல உயரமான கட்டிடங்களை கொண்டது துபாய். அந்த வகையில் சவுதி அரேபியாவில் புதிய உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தை விட உயரமான கட்டிடம் அங்கே கட்டப்பட்டு வருகிறது. 'ஜே.இ.சி. டவர்' (JEC Tower) என்ற இந்த கட்டிடம்தான் உலகின் அடுத்த டாப் ஸ்பாட்டாக இருக்க போகிறது!

சவுதி அரேபியாவில் ஜெட்டாவின் துறைமுக நகரத்தில் பிரமாண்டமாக எழுப்பப்படும் இந்தக் கட்டடம், சவுதி இளவரசர் அல் வலீத் பின் தலால் அல் சவுத் தலைமையில் கட்டப்பட்டு வருகிறது. இது முன்னர் கிங்டம் டவர் மற்றும் ஜெட்டா டவர் என அறியப்பட்டது.

இந்த மெகா கட்டடத்தின் இறுதி உயரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இதன் வடிவமைப்பாளர்களான AS+GG (அட்ரியன் ஸ்மித் + கார்டன் கில்) நிறுவனம், ஜே.இ.சி. டவர் 1 கிலோமீட்டருக்கும் (0.62 மைல்) அதிகமாக இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இது உலகின் தற்போதைய மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவை விடவும் குறிப்பிடத்தக்க அளவில் உயரமாக இருக்கும்.

Burj Khalifa vs JEC Tower Saudi Arabia is building its biggest and the tallest building in the world

இரண்டு கோபுரங்களின் ஒப்பீடு

1. உயரம்

புர்ஜ் கலீஃபா: 828 மீட்டர்

JEC கோபுரம்: திட்டமிடப்பட்டுள்ளது ~1,000 மீட்டர்

2. தளங்கள்

புர்ஜ் கலீஃபா: 163 தளங்கள்

JEC கோபுரம்: சுமார் 157 தளங்கள் திட்டமிடப்பட்டுள்ளன

புர்ஜ் கலீஃபா உயரம் குறைவாக இருந்தாலும் அதிக தளங்களைக் கொண்டுள்ளது

3. இடம்

புர்ஜ் கலீஃபா: துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

JEC கோபுரம்: ஜெட்டா, சவுதி அரேபியா

4. எப்போது பயனுக்கு வரும்?

புர்ஜ் கலீஃபா: 2010 இல் நிறைவடைந்தது

JEC கோபுரம்: கட்டுமானத்தில் உள்ளது, 2028 இல் எதிர்பார்க்கப்படுகிறது

5. எதற்காக கட்டப்படுகிறது?

புர்ஜ் கலீஃபா: குடியிருப்பு, ஹோட்டல், அலுவலகங்கள், கண்காணிப்பு தளங்கள்

JEC கோபுரம்: இதேபோன்ற கலப்பு-பயன்பாடு ஆனால் அதிக ஆடம்பரம் மற்றும் உயர்ந்த கண்காணிப்பு தளத்துடன் இந்த கோபுரம் கட்டப்படும்.

உலகின் உயரமான கட்டிடம்

மேலும், அமெரிக்காவின் மிக உயரமான ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டரை விட கிட்டத்தட்ட இரு மடங்கு உயரமாகவும், மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான 'தி ஷார்ட்' கட்டடத்தை விட மூன்று மடங்கு உயரமாகவும் இது அமையும். ஜெட்டாவின் செங்கடல் துறைமுக நகரில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடம், ஈபிள் கோபுரத்தை விடவும் மூன்று மடங்கு உயரமானதாக இருக்கும்.

ஜெட்டா எகனாமிக் கம்பெனி (Jeddah Economic Company) திட்டத்தின் கீழ் உருவாகும் ஜே.இ.சி. டவரில், 59 லிஃப்டுகளும் குறைந்தது 157 தளங்களும் இருக்கும். உலகின் மிக உயரமான கண்காணிப்புப் பகுதி, ஒரு சொகுசு ஹோட்டல், ஏராளமான அலுவலக இடங்கள் மற்றும் சவுதி இளவரசர்களுக்கான ஆடம்பரமான குடியிருப்புகள் எனப் பல்வேறு வசதிகள் இதில் இடம்பெறும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கின. தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டடத்தின் மையப் பகுதி 69வது தளத்தை எட்டியுள்ளது. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான மொத்த கான்கிரீட்டில் சுமார் 50% தற்போது பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பணிகள் இன்னும் நிறைய இருந்தாலும், 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்ற தங்கள் எதிர்பார்ப்பை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, வரும் ஆண்டில் மேலும் பல முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். உலகின் அடுத்த மிகப்பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+