ரூ.20 லட்சத்திற்கு துபாயில் தங்கம் வாங்கி.. அதை இந்தியாவில் விற்றால் லாபம் கிடைக்குமா? எளிய உதாரணம்
துபாய்: பொதுவாக வேலைக்காக துபாயில் வசிப்போர் நாடு திரும்பும்போது பல விஷயங்களை நண்பர்களுக்காக வாங்கி வருவார்கள். துபாயில் இந்தியாவைக் காட்டிலும் தங்கம் விலை குறைவாக இருக்கும் சூழலில், அப்படித் தங்கத்தை வாங்கி வந்தால் அதில் லாபம் கிடைக்குமா? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்!
துபாயில் தங்கம் விலை இந்தியாவில் இருப்பதை விட 5-7% குறைவு தான். இதற்குப் பிரதானக் காரணமே வரி தான். அங்குத் தங்கக் கட்டிகளுக்கு இறக்குமதி வரி, ஜிஎஸ்டி இல்லை. இதன் காரணமாகவே அங்கு விலை குறைவாக இருக்கிறது. அப்போ அங்குப் போய் வாங்கிவிட்டு வந்து இங்கே விற்றாலே லாபம் தானே என நீங்கள் கேட்கலாம்.. அதற்குச் சில கண்டிஷன்கள் உள்ளன.

விதிகள் சொல்வது என்ன
உதாரணமாக 2026 விதிகளின்படி, ஓராண்டுக்கு மேல் அங்குத் தங்குவோர் மட்டுமே குறிப்பிட்ட அலவு தங்க நகைகளை வரி விலக்கின்றிக் கொண்டு வரலாம். மேலும், இதில் சில நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. ஒவ்வொன்றாக நாம் அதைப் பார்க்கலாம்!
முதலில் துபாயில் ஓராண்டு வசித்துவிட்டு இஷ்டத்திற்கு எல்லாம் நகையை எடுத்து வர முடியாது. ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் வசித்த இந்தியப் பயணிகளில் ஆண்கள் அதிகபட்சம் 20 கிராம் தங்கத்தை மட்டுமே எடுத்து வர முடியும். அதேபோல பெண்கள் 40 கிராம் வரையிலான தங்க நகைகளை மட்டுமே வரி விலக்கின்றி கொண்டு வரலாம். இது நகைகளுக்கு மட்டுமே, கட்டிகள் அல்லது நாணயங்களுக்கு அல்ல.
வரி செலுத்த வேண்டும்
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "இந்த வரம்பிற்குள் இருந்தால் மட்டுமே வரி விலக்கு இல்லாமல் நகையை எடுத்துவர முடியும். இந்த வரம்பைத் தாண்டும்போது நாம் வரி செலுத்த வேண்டும். 3%ல் தொடங்கி 6% அல்லது 10% வரை கூட சுங்க வரி செலுத்த வேண்டிய சூழல் வரலாம். அதேநேரம் ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியவர்களுக்குத் தங்கக் கட்டிகள்/ நாணயங்களில் மட்டும் 6% சலுகை வரி உண்டு. குறைந்த காலப் பயணிகளுக்கு 36-38.5% வரை வரி பொருந்தும். இந்தியாவில் விற்கும்போது, 3% ஜிஎஸ்டி மற்றும் அந்நியச் செலாவணி மாற்றுக் கட்டணங்கள் கட்டாயமாகும்" என்றார்.
இதெல்லாம் உங்களுக்கு ஓகே என்றாலும் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. அதாவது கரன்சி மதிப்பு எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. கரன்சியில் எதிர்பார்க்காத மாற்றம் நிகழ்ந்தால் உங்கள் லாபம் நொடியில் போய்விடும்.
சிக்கல் அதிகம்
மேலும், இதில் இன்னொரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. அதாவது தங்கத்தை இந்தியாவுக்கு எடுத்து வரும் விதிகளில் பல சிக்கலானவை. பலருக்கும் இதைப் படித்தாலும் தெளிவு கிடைக்காது. அவ்வளவு ரிஸ்கள் உள்ளன. எனவே, நீங்கள் தங்கம் எடுத்து வரும்போது அவை விதிகளை மீறியிருந்தால் அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்படும். மேலும், உங்களுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். சில நேரம் கைது நடவடிக்கையையும் கூட எதிர்கொள்ள நேரிடும். இப்படி பல ரிஸ்க் இருக்கிறது.
எளிய உதாரணம்
ஒரு சின்ன உதாரணத்தையும் நாம் பார்க்கலாம். அதாவது நீங்கள் ₹20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை துபாயில் வாங்கி இந்தியா எடுத்து வருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். விதிகளை முறையாகப் பின்பற்றி, அதை இந்தியாவுக்கு எடுத்து வந்தாலும் கூட உங்களுக்கு லாபம் இருக்காது. அங்குக் கிடைக்கும் 5-7% விலை வித்தியாசம் பார்க்கப் பெரிதாகத் தோன்றலாம். ஆனால், 6% சுங்க வரி, 3% ஜிஎஸ்டி, அந்நியச் செலாவணி கட்டணங்கள் ஆகியவை தனியாக உள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து கணக்கு போட்டால் இதில் லாபத்தை விட ரிஸ்க் தான் அதிகம். எனவே, நகை வாங்கப் பக்கத்தில் இருக்கும் நகைக்கடைக்குச் செல்வதே சிறந்தது!
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications