நொடிகூட கண்ணை இமைக்க முடியாது.. புத்தாண்டை கலர்ஃபுல்லாக வரவேற்ற துபாய்!
Recommended Video
துபாய்: 2019 புத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே முதலில் உலக மக்கள் கவனம் திரும்புவது துபாய் கொண்டாட்டங்கள் மீதுதான்.
ஒவ்வொரு புத்தாண்டுக்கும், துபாயிலுள்ள உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில், நடத்தப்படும், மின் ஒளி அலங்காரம் மற்றும் வான வேடிக்கைதான் இதற்கு காரணம்.
இந்த வருடமும் மிக சிறப்பாக புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். புத்தாண்டு கொண்டாட்டங்களை நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் பல கோடி பேர் ஒரே நேரத்தில் கண்டு ரசித்தனர்.
#WATCH: Dubai welcomes the new year 2019 pic.twitter.com/HOIT9GAXLE
— ANI (@ANI) December 31, 2018
திரையை விட்டு கண்ணை எடுக்க விடாமல் செய்யக்கூடிய அளவுக்கு, மிக சிறப்பாக கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், மக்கள் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்தனர். நீங்களும் அந்த அலங்காரம் மற்றும் வான வேடிக்கையை கண்டு ரசிக்கலாம்.