தீ விபத்தில் 43 பேர் பலி: ரியல் எஸ்டேட் உரிமையாளர்களே காரணம்- குவைத் துணை பிரதமர் குற்றச்சாட்டு
துபாய்: குவைத் தீ விபத்தில் 43 பேர் பலியானதற்கு ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்களே காரணம் என அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷேக் ஃபகத் யூசுப் சவுத் அல் ஷாபா தெரிவித்துள்ளார்.
குவைத்தின் தெற்கு பகுதியான மங்கஃப் என்ற இடத்தில் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்த 6 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; எஞ்சிய 3 பேர் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மேலும் தீ விபத்தில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியர்கள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து நிகழ்ந்த கடிட்டம், கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமானது. தீ விபத்து சம்பவ இடத்தை அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷேக் ஃபகத் யூசுப் சவுத் அல் ஷாபா நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் ஷேக் ஃபகத் யூசுப் சவுத் அல் ஷாபா, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விதிகளை மீறுவதுதான் இத்தகைய விபத்துகளுக்கு அடிப்படையான காரணம். தற்போது தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
இதனிடையே குவைத்தில் உள்ள இந்திய தூதரகமானது தீ விபத்து தொடர்பான தகவல்களை அறிய 965-65505246 என்ற உதவி எண்ணை வெளியிட்டுள்ளது.
இத்துயர சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில், குவைத் தீ விபத்து தகவலால் அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் அதிகமானோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications