துபாய் டூ அபுதாபி.. தூக்கத்தை இழந்த மக்கள்.. 48 மணிநேரத்தில் 6 ட்ரோன் தாக்குதல்!
துபாய்: ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கடந்த வாரம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்தியாவுக்கு வந்தார். இவருடைய இந்திய பயணம் முடிந்து பின்பு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வான்பாதுகாப்பு அமைப்பு கடந்த 48 மணி நேரத்தில் 6 ட்ரோன்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த ட்ரோன்கள் நாட்டின் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு இடங்களை இலக்காகக் கொண்டு வந்ததாக UAE பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் முயற்சிகளில் எந்தவித உயிரிழப்போ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று UAE அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் வகையில் UAE-யின் பாதுகாப்பு அமைப்பையும், ராணுவத்தையும் உச்சக்கட்ட எச்சரிக்கையில் வைத்துள்ளது.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை (ஞாயிறு) நடைபெற்ற ஒரு ட்ரோன் தாக்குதல் முயற்சியில், UAE-யின் முக்கிய அணு மின் நிலையமான பராகா அணு மின் நிலையம் (Barakah Nuclear Facility) இலக்காக வைக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த ட்ரோன்கள் ஈராக் பகுதியில் இருந்து வந்தவை என்று UAE பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வேளையில், இந்த ட்ரோன் தாக்குதல் வளைகுடா பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதேவேளையில் இந்த 6 ட்ரோன்களை ஈரான் தாக்கியதாக இதுவரையில் அறிவிப்பு வெளியிடவில்லை.
இதேவேளையில் அமெரிக்காவில் மீண்டும் ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலின் மூத்த பாதுகாப்பு துறை தலைவர்கள் ஆலோசனை செய்வதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து UAE அரசு முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 48 மணிநேரத்தில் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடக்கும் காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தின் எல்லையோர மக்கள் தூக்கத்தை தொலைத்து பீதியில் உள்ளனர்.
-
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி?












Click it and Unblock the Notifications