அந்தமான் நிகோபாரை அதிர வைத்த நிலநடுக்கம்..அடுத்தடுத்து 6 முறை கடலுக்குள் அதிர்வு
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகலில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் அருகே 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர் நிலநடுக்கம் கரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் அருகே நிலநடுக்கமானது முதலில் காலை 11 மணிக்கும் பின்பு தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது.பிற்பகல் 3:02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
மிக கடுமையான நிலநடுக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன. கடந்த 2020ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் 5 முறை நில நடுக்கம் பதிவானது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலையில் இன்றைய தினம் அடுத்தடுத்து ஆறு முறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications