ஆரம்பிக்கலாங்களா.. 18 நிமிஷத்தில் 2 கிலோ பிரியாணி ஸ்வாஹா! 170 பேரை தோற்கடித்த பாபு! கமகமத்த ஈரோடு!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் முன்சீப் கோர்ட் எதிரே உள்ள அரிசி மண்டியின் சார்பில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் பந்தயத்தில் கலந்துகொண்ட வீர்ர் ஒருவர் 2 கிலோ பிரியாணியை 18 நிமிடத்தில் சாப்பிட்டு 3 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள முன்சீப் கோர்ட் எதிரில் வைரகிரீடம் அரிசி மண்டி கடந்த 1984 ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முன்சீப் கோர்ட் எதிரில் உள்ள அரங்கத்தில் பிரியாணி பந்தயம் நடைபெற்றது.

பிரியாணி பந்தயம்
இந்த 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் சாப்பிடுபவர் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டு 3 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் மொத்தமாக 170 பேர் கலந்து கொண்டனர். மணமணக்கும் பிரியாணியை சாப்பிட தயாராகினர்.

உற்சாகம்
மேலும் 25க்கும் மேற்பட்ட பெண்களும் பள்ளி கல்லூரி மாணவிகளும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 2 கிலோ பிரியாணியுடன் தயிர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. போட்டி ஆரம்பித்த முதல் பத்து நிமிடத்தில் 5 க்கும் மேற்பட்டவர்கள் வேகமாக சாப்பிட்டனர்.

2 கிலோ பிரியாணி
எப்படியும் ஜெயித்து விடலாம் என போட்டியாளர்கள் கபகபவென பிரியாணியை துவம்சம் செய்து வெற்றிக்கோட்டை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் எவரும் எதிர்பாராத விதமாக பாபு என்ற இளைஞர் 18.18 நிமிடங்களில் 2 கிலோ பிரியாணியை முழுமையாக சாப்பிட்டு இருக்கையை விட்டு எழுந்தார்.

3 ஆயிரம் பரிசு
இதனைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் அத்துடன் சாப்பிடுவதை நிறுத்தி மிகுதியாக இருந்த பிரியாணியை பக்கெட்டில் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். இதில் வெற்றி பாபு என்பவருக்கு வைரகிரீடம் அரிசிமண்டி நிறுவனர் 3 ஆயிரம் பரிசுத் தொகையினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வைரகிரீடம் ராஜா மற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications