ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு!
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு- இடைத்தேர்தல் அதிகாரி!
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியுமான சிவக்குமார் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர், பல்லவபுரம் நகராட்சி ஆணையராகவும் பணியாற்றினார்.

பல்லவரபும் நகராட்சி ஆணையராக சிவக்குமார் பணிபுரிந்த போது அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்ச புகார்கள் அரசுக்கு சென்றன. இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன. அத்துடன் மேல்நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பின்னர் பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.
அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிகாரியாகவும் செயல்பட்டார் சிவக்குமார்.

இந்நிலையில் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில்தான் இன்று ஈரோட்டில் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது. இது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications