ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பிரசாரத்துக்கு தடை ? மாநகராட்சி கமிஷனரிடம் அருந்ததியர் புகார்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பிரசாரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அருந்ததியர் மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
ஈரோடு: அருந்ததியர் ஜாதியினரை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் அச்சமூக மக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில் மேனகா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பேசிய சீமான், ஆந்திராவில் இருந்து மலம் அள்ளுவதற்காக அருந்ததியினரை விஜயநகர பேரரசர்கள் கொண்டு வந்துவிட்டனர் என்ற பொருளில் பேசி இருந்தார். இது அருந்ததியினர் ஜாதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு அருந்ததியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அருந்ததியினர் பகுதிக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் விரட்டியடிக்கப்பட்டனர். அத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சீமானின் கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்தினர் அருந்ததியினர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று பழனி பேருந்து நிலையம் முன்பு சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் இளம்புலிகள் அமைப்பு மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சீமானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் அருந்ததிய சமூகத்தினர் நேற்று மனு கொடுத்தனர். அம்மனுவில், அருந்ததியர் சமூக மக்களாகிய நாங்கள் தோல் பொருட்கள் தயார் செய்து வருகிறோம். கடந்த 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்களது சமூகத்தை சாதி ரீதியாக இழிவு படுத்தும் வகையில், துப்புரவு பணி செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் தான் அருந்ததியர்கள் என்று பேசினார். இது ஆதித் தமிழர்களான அருந்ததியர் சமூகத்தை சார்ந்த எங்களுக்கு வேதனையும், அவமானமும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது.

இந்திய விடுதலை போராட்டத்தில் முதன்மை களப்போராளியாக உயிர் தியாகம் செய்த மாமன்னர் ஒண்டிவீரன், வீரத்தாய் குயிலி, மாவீரன் பொல்லான் உள்ளிட்ட ஆதித்தமிழர்களான அருந்ததியர் சமூக வீரர்களுக்கு மணிமண்டபங்கள் அமைத்து தமிழ்நாடு அரசு போற்றி வருகிறது. தற்போது அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தி சீமான் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வருகிறார்.
மேலும் அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிக்க செல்வதாக வரும் சீமான் கட்சியினர் சீமான் பேசியதையே அருந்ததியர்கள் துப்புரவு பணிக்காக ஆந்திராவில் இருந்து கொண்டு விடப்பட்டதாக அம்மக்களிடையே வீண் பதற்றத்தையும், சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்காக முயற்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகரில் 35 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட 100-க்கும் மேற்பட்ட அருந்ததியர் பகுதி மக்களிடையே தொடர்ந்து இவ்வாறு சாதி ரீதியாக வெறுப்பு பிரசாரம் செய்து வருவது மிகப்பெரிய சமூக பதற்றத்தை உருவாக்கும். எனவே சீமான் மீதும் அவருடைய கட்சியினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு சீமானின் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.
-
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா!












Click it and Unblock the Notifications