தும்பிக்கையில் குச்சியை விட்டு.. 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை.. முரண்டு பிடித்த யானைகள்!
ஈரோடு: முதுமலை தொப்பைக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனைக்கு முரண்டு முடித்த யானைகளுக்கு பாகன்கள் உதவியுடன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையை சிதைத்த கொரோனா வைரஸ் இப்போது விலங்குகளையும் தாக்க தொடங்கி விட்டது.

சிங்கத்தை சாய்த்த கொரோனா
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வந்த 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கபட்டு அதில் ஒரு சிங்கம் பலியாதனாக பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு
இதனை தொடர்ந்து அங்குள்ள மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செயப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களும் தனியாக வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வனத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

யானைகளுக்கு பரிசோதனை
இந்த நிலையில் முதுமலையில் உள்ள தொப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று காலை கொரோனா பரிசோதனை செயப்பட்டது. வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவர்கள் யானைகளின் தும்பிக்கை மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். பரிசோதனைக்கு முரண்டு முடித்த யானைகளுக்கு பாகன்கள் உதவியுடன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

முடிவு எப்போது தெரியும்?
சேகரிக்கப்பட்ட மாதிரிகளை உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளனர். சில நாட்களில் பரிசோதனை முடிவுகள் தெரிய வரும். இது தவிர தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

யானைகளுக்கு சமூக இடைவெளி வேண்டும்
உணவு வழங்குவதற்காக யானைகளை வரிசையில் நிறுத்தக் கூடாது, யானைகளுக்கு இடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பாகன்கள் தேவையின்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் அடங்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications