புதிய சாலையை திறந்து வைத்த சிறுமி... வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமியின் பெருந்தன்மை..!
ஈரோடு: ஈரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை விபத்தில் தந்தையை பறிகொடுத்த சிறுமி ஒருவர், அமைச்சர் முத்துச்சாமி முன்னிலையில் திறந்து வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கை. ஆனால் அது கடந்த மே மாதம் வரை நிறைவேற்றப்படாததால் 45-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் அங்கு நிகழ்ந்திருக்கின்றன.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கராஜ் மற்றும் சபரி என்ற இருவரும் பழுதடைந்த சாலையில் டூவிலரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த அவர்கள் இருவரது குடும்பத்தினரும் இதுபோன்ற ஒரு விபத்து இனி ஏற்படக்கூடாது என்பதை எண்ணி தொடர்ந்து சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்தக் குடும்பத்தினர் முன்னெடுத்த தொடர் முயற்சியின் காரணமாக அமைச்சர் முத்துச்சாமியின் கவனத்துக்கு இந்த விவரம் சென்றிருக்கிறது. இதையடுத்து அந்த சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், சாலையை சீரமைக்க மின்னல் வேக நடவடிக்கை மேற்கொண்டார்.
அடுத்த நான்கே நாட்களில் சாலை பளபளவென புதிதாக மாறியது. இதையடுத்து அந்த சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தாமதமின்றி திறந்து வைக்க வந்த அமைச்சர் முத்துச்சாமி, சாலை சரியில்லாமல் இருந்தபோது தந்தையை விபத்தில் பலி கொடுத்த சிறுமியை அழைத்து சாலையை திறந்து வைக்குமாறு கூறினார்.
அந்தச் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் தயங்கியபோதும் கூட, ''இந்தச் சாலையை திறந்து வைக்க என்னை விட நீ தான் பொருத்தமான நபர்'' எனக் கூறி தனது பெருந்தன்மையையும், அரசியல் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார் அமைச்சர் முத்துசாமி.
கல்வெட்டில் பெயர் சிறியதாக உள்ளது, நான் வரும்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என கணக்கு பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இதுபோன்ற யதார்த்த நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications