பேருந்து நிலையத்திலேயே மோதல்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. மதுரையில் அதிர்ச்சி
பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.பள்ளி மாணவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் கல்லூரிகளிலும் வாரம் 6 நாட்கள் பாடம் நடத்தலாம் என்றும், அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் வழக்கமாக பள்ளிக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

நீ பெரியவனா? நான் பெரியவனா?
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் மாணவர்கள் இருதரப்பாக பிரிந்துத்தான் செயல்பட்டு வருகின்றனர், சீனியர், ஜுனியர் என்ற அடிப்படையிலும், இரண்டு சமூகம் என்ற அடிப்படையிலும் ஒருவித பகை உணர்வோடுத்தான் சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் அடிக்கடி நிகழும் பேருந்து மற்றும் ரயில்களில் பிரபல கல்லூரி மாணவர்கள் அடிக்கடி தாக்கிக் கொள்ளும் சம்பவங்களை பார்த்து வருகிறோம்.

பஸ் ஸ்டாண்டில் தகராறு
மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் நவம்பர் 16ம் தேதி பேருந்தில் செல்வதற்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அரசுப் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடையே முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் +1 மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது +2 மாணவர்கள் அவர்களை கலாய்த்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த +1 தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட மோதல் தொடங்கியது.

சமாதானம் செய்த பயணிகள்
ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த சண்டை இருதரப்பினரிடையே சாதிக் கலவரம் போல் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இருதரப்பு மாணவர்களை விலக்கி விட சில மாணவர்கள் முயன்றனர். பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இருதரப்பினரையும் திட்டினர். சிலர் நமக்கெதுக்கு வம்பு என எதுவும் தெரியாததுபோல் கடந்து சென்றனர். ஆனால் இருதரப்புக்கு கோபம் அடங்கவில்லை.

பயணி ஒருவர் படம்பிடித்தார் ஸ்டண்ட் காட்சிகள் படம்பிடிப்பு
இந்நிலையில் இவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் குறித்து சிலர் பேரையூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு போலீசார் இதுபோன்று மாணவர்கள் அடித்துக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடப்பதுதான்.

வழக்கமான ஒன்றுதான்
இந்த வீடியோ வைரல் ஆனதால் பேசப்படுகிறது அவ்வளவுதான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த வீடியோ வைரல் ஆனதால் போலிசார் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ள மாணவர்கள் அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications