Oneindia Tamil செய்தி எதிரொலி : ஒசூர் அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதவிய தொழிலதிபர்கள்
ஒசூர்: தமிழ் ஒன் இந்தியா செய்தி எதிரொலியாக ஒசூர் அருகே உணவின்றி தவித்து வந்த நரிக்குறவர் குடும்பங்களுக்கு தொழிலதிபர்கள் உதவியுள்ளனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரியசந்திரம் கிராமத்தில் 200 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊசி மணி, பாசி மணி, பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
கேரள சட்டசபையில் ஒலித்த தமிழ்... தாய்மொழியில் உறுதிமொழி கூறி பதவியேற்ற தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ
கொரோனா ஊரடங்கு
கடந்த ஆண்டு முதல் அலையின் போது இந்த சமூக மக்கள் வருமானமின்றி தவித்தனர். அது போல் இந்த இரண்டாவது அலையின் போதும் கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரமின்றி வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் வருமானமின்றி ஒருவேளை உணவிற்கே அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய பொருள்
பணமாக இல்லாமல், பொருளாக உதவிட அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த செய்தியை 20 ஆம் தேதி நமது தமிழ் ஒன் இந்தியா இணையத்தில் விவரித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நமது செய்தியின் எதிரொலியாக ஒசூரை சேர்ந்த தொழிலதிபர்கள் கிருஷ்ணா, சம்பத்குமார் ஆகிய இருவரும் நரிக்குறவர்களுக்கு உதவ முன் வந்தனர்.
5 கிலோ அரிசி
இவர்கள் இருவரும் 200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், 2 கிலோ கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தொகுப்பு உள்ளிட்டவை வழங்கினர். அந்த பொருட்களை நரிக்குறவர் சமூக மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடித்தபடி பெற்று சென்றனர்.
மனமார்ந்த நன்றி
இதுக்குறித்து நரிக்குறவர் சமூக மக்கள் செய்தியை வெளியிட்ட தமிழ் ஒன் இந்தியா நிறுவனத்துக்கும், உதவிய தொழிலதிபர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இருப்பவர்கள் இல்லாதோருக்கு கொடுத்துவிட்டு உணவு உண்பதே சிறந்த தானமாகும்.