சமைக்காத கோழிக்கறி.. சின்ன சிக்கன் பீஸை சாப்பிட தந்த அப்பா.. ஆடிப்போன ஆந்திரா.. தீவிர பறவை காய்ச்சல்
ஹைதராபாத்: எப்போமே முறையாக சிக்கனை சமைத்து சாப்பிட்டால் எந்த நோயும் நம்மை அண்டாது.. ஏனென்றால், பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸ் 70°C வெப்பத்தில் கொல்லப்பட்டுவிடும். ஆனால், சரியாக வேகவைக்கப்படாத சிக்கனை சாப்பிடும்போது, பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.. அதிலும் சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால்? இதோ ஆந்திர மாநிலத்தில் என்ன நடந்துள்ளது பாருங்கள்!
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பேயே, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு வங்காவரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவ துவங்கிவிட்டது..இதையடுத்து, பறவை காய்ச்சல் காரணமாக கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பல கோழிகள் தினமும் இறக்க ஆரம்பித்தன.. பின்னர், மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு, வேல்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.. இந்த பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிப் பண்ணை வைக்கவும், சிக்கன், முட்டை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் அதிகரிப்பு
இந்நிலையில், பறவை காய்ச்சலுக்கு2 வயது குழந்தை இறந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையை சேர்ந்த தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.. குழந்தையின் அப்பா ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்..குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி, அவரது பெற்றோர் ஒரு சிறிய துண்டு சமைக்காத சிக்கனை ஊட்டி விட்டுள்ளனர்.
பச்சை சிக்கனை சாப்பிட்டதுமே, அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.. தொடர்ந்து வயிற்றுப்போக்கும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.. இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர், குழந்தையை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.. ஆனால், குழந்தையின் உடல் நிலை மோசமாகிவிட்டது. அதனால், மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...
ரத்த மாதிரிகள் சோதனை
உடனடியாக டெஸ்ட்கள் எடுக்கப்பட்டன.. மார்ச் 4ம் தேதி பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் குழந்தைக்கு தென்பட்டது. தொடர்ந்து சிகிச்சை தந்தபோதும்கூட, மார்ச் 16ம் தேதி குழந்தை இறந்துவிட்டது..
இதற்கு பிறகு நடந்த மருத்துவ பரிசோதனையில் பறவைக் காய்ச்சலால், அந்த குழந்தை இறந்தது தெரியவந்தது.. பிறகு, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் குண்டூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் குழந்தைக்கு பறவை காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தன.. இதையடுத்து, அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
நன்றாக வேக விடுங்கள்
இது குறித்து சுகாதார அதிகாரிகள் சொல்லும்போது, "சிறுமியின் குடும்பத்தினர் கோழிக்கறி வாங்கிய கடையில் கோழிக்கறி வாங்கியவர்களின் மாதிரியும் எடுத்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. சிக்கன் கடையிலிருந்து, சிக்கன் வாங்கியவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து, அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்தோம். யாருக்கும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை.. அனைவருமே நன்றாக சமைத்த கோழியை சாப்பிட்டுள்ளனர்.. இதனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் .. கோழி மற்றும் முட்டைகளை நன்றாக சமைத்த பிறகே சாப்பிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
பச்சை சிக்கன்
உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து சொல்லும்போது, "இதற்கு முன்பும் இதேபோல சமைக்காத சிக்கனை சாப்பிட கொடுத்து இருக்கிறோம். அப்போது எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் இப்போது மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பிரச்சனை ஏற்பட்டது' என்றனர்..
2 வயது குழந்தை உயிரிழந்ததையடுத்து, அனைத்து கோழிப்பண்ணைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2021-ம் ஆண்டு ஹரியானாவில் முதல் முறையாக பறவைக்காய்ச்சலுக்கு மனிதர்கள் உயிரிழப்பு நடந்தது. அதற்கு பிறகு இப்போதுதான் ஆந்திராவில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications