கண்ணீர்விட்டு அழுத அசதுத்தீன் ஒவைசி - இந்தியாவில் இஸ்லாமியர்கள் துடைத்து எரியப்படுவதாக வேதனை
ஐதராபாத்: நிஜாமுத்தீன் மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின்போது உரையாற்றிய ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசி, இந்தியாவிலிருந்து இஸ்லாமியர்கள் துடைத்து எரியப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
ஐதராபாத்தின் பழமையான நிஜாமுத்தீன் மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறை சம்பவங்களை பட்டியலிட்டார்.

தினசரி அரங்கேறும் அநீதிகள்
அப்போது பேசிய அவர், "அநீதியான பல விசயங்கள் நம் நாட்டில் நடந்துகொண்டு இருக்கின்றன. அது தொடர்பாக எனக்கு தினமும் அழைப்புகள் வந்தபடியே உள்ளன. நாம் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். நமது கடைகளும், வீடுகளும் தகர்க்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. நாம் பயந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். நாம் கவலைப்படுவதாக சிலர் சொல்கிறார்கள்.

அரசின் அடக்குமுறை
நான் இங்கு உங்கள் முன் ஒன்றை சொல்கிறேன். அதிர்ச்சியடையாமல் இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். இந்தியாவில் அரங்கேறிக் கொண்டு இருக்கும் சம்பவங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளாகும். மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏராளமான முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. சென்த்வாவில் 13 வீடுகள் இடிக்கப்பட்டன.

கை இல்லாதவரின் கடை இடிப்பு
மத்திய பிரதேசத்தில் வசீம் சேக் என்பவரது கடை புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டது. இரண்டு கைகளும் இல்லாத அவர் கலவரத்தில் கல் எரிந்ததாக கூறி கடையை இடித்தனர். அரியானாவில் வயதான நபரை பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் கொடூரமாக தாக்கி தாடியை வெட்டினர். அதே அரியானாவில் பசுக்களை வெட்டியதாக கூறி ஒருவரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கினர்.

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு
ஜஹாங்கிர்புரியில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்களது கடைகள், வீடுகள் அனைத்தும் புல்டோசரில் இடிக்கப்பட்டன. ஒருபோதும் தைரியத்தை இழக்காதீர்கள். அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம். கொடூரமானவர்களே! கொஞ்சம் கவனியுங்கள். நாங்கள் உங்கள் அடக்குமுறைகளை கண்டு அஞ்சவில்லை. எங்கள் பொறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். களத்தைவிட்டு செல்ல மாட்டோம்." எனக்கூறிய அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுதார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications