நிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்?.. பல கோடி மோசடி.. வழக்கு!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
Recommended Video

ஹைதராபாத்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
பாஜக கட்சிக்கு தற்போது புதிய தலைவலியாக , கட்சியின் தேசிய பொதுச்செயலாளரே மோசடி வழக்கில் சிக்கி இருக்கிறார். பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
மஹிபால் ரெட்டி என்ற நபருக்கு முரளிதர ராவ் வேலை வாங்கி தருவதாக கூறி 2.1 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக புகாரில் கூறப்பட்டு இருக்கிறது.

என்ன நடந்து இருக்கிறது
பாஜகவை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டி என்ற நபர், ஹைதராபாத்தில் வசித்து வரும் மஹிபால் ரெட்டி மற்றும் அவரின் மனைவி ப்ரவர்ணா ரெட்டி ஆகியோருக்கு வேலை வாங்கி தருவதாக சில மாதங்களுக்கு முன் அணுகி இருக்கிறார். மத்திய அரசின் வர்த்தக துறையில் வேலை வாங்கித்தரப்படும் என்று கூறியுள்ளார்.

பணம்
இந்த நிலையில் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவையும் இவர்களுக்கு ஈஸ்வர் அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2.1 கோடி இவர்களிடம் இருந்து வாங்கப்பட்டு இருக்கிறது. வேலை வாங்கி கொடுப்பதற்கான பத்திரத்தையும் இவர்களிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் என்ன
அதேபோல் வேலைக்கான அப்பாயின்மென்ட் கடிதத்தையும் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் இருந்து பெற்று தந்துள்ளனர். இதில் அப்போதைய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தும் இருந்துள்ளது. ஆனால் மஹிபால் ரெட்டிக்கு எந்த விதமான வேலையும் கடைசி வரை வாங்கி தரப்படவில்லை. இதில் இருக்கும் கையெழுத்தும் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழக்கு
இதையடுத்து தற்போது மஹிபால் மற்றும் அவரது மனைவி ப்ரவர்ணா இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மோசடி, போர்ஜரி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் முரளிதர ராவ் நேரடியாக ஈடுப்பட்டு இருப்பதால் அவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். பாஜக கட்சியினருக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications