பாஜக ஒரு பிஸினஸ் கட்சி.. வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.. விளாசிய ராகுல் காந்தி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி பாஜக கட்சி பிசினஸ் செய்யும் கட்சி என்றும் வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை பாஜக சீரழிக்கிறது என்றும் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடைபபயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தனது பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கினார்.

பாரத் ஜோடா யாத்திரை
தமிழகத்தை அடுத்து ராகுல் காந்தி கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டார். அங்குள்ள மக்களை சந்தித்து வந்த ராகுல் காந்தி அதனை தொடர்ந்து கர்நாடகாவில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அங்கு ராகுல் காந்தியின் நடைபயணத்தில் தாயார் சோனியா காந்தியும் சிறிது தூரம் கலந்து கொண்டு கட்சியினருக்கு உற்சாகம் அளித்தார். இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.

தெலுங்கானாவில் ராகுல் காந்தி
தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பாத யாத்திரைக்கு இடையே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ராகுல் காந்தி மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பாஜகையும் தெலுங்கானாவில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறியதாவது:-

மக்களின் வாழ்க்கையை சீரழிக்க..
நாட்டில் உள்ள உள்ள நமது சகோதரர்களுக்கு இடையே வெறுப்பை பரப்பி மக்கள் விரோத கொள்கைகள் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சீரழிக்க பாஜக நினைக்கிறது. டெல்லியிலிருது பாஜக இதை செய்கிறது என்றால் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்-உம் இதை செய்கிறது. இந்த இரு கட்சிகளுமே ஒன்றுதான். ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு கட்சிகளுமே அரசியல் கட்சிகள் கிடையாது.

பிசினஸ் செய்யும் கட்சிகள்
மாறாக பிசினஸ் செய்யும் கட்சிகள். எளிய மக்களை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால் பணக்காரர்களின் நலனில் தான் அக்கறை உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டது. பாஜக கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு சந்திரசேகர் ராவ் ஆதரவு அளித்தார். அடிப்படை விவசாய பொருட்களுக்கு கூட 18 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கபட்டுள்ளது" என்றார்.
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications