பாஜக ஒரு பிஸினஸ் கட்சி.. வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.. விளாசிய ராகுல் காந்தி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி பாஜக கட்சி பிசினஸ் செய்யும் கட்சி என்றும் வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை பாஜக சீரழிக்கிறது என்றும் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடைபபயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தனது பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கினார்.

பாரத் ஜோடா யாத்திரை
தமிழகத்தை அடுத்து ராகுல் காந்தி கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டார். அங்குள்ள மக்களை சந்தித்து வந்த ராகுல் காந்தி அதனை தொடர்ந்து கர்நாடகாவில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அங்கு ராகுல் காந்தியின் நடைபயணத்தில் தாயார் சோனியா காந்தியும் சிறிது தூரம் கலந்து கொண்டு கட்சியினருக்கு உற்சாகம் அளித்தார். இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.

தெலுங்கானாவில் ராகுல் காந்தி
தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பாத யாத்திரைக்கு இடையே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ராகுல் காந்தி மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பாஜகையும் தெலுங்கானாவில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறியதாவது:-

மக்களின் வாழ்க்கையை சீரழிக்க..
நாட்டில் உள்ள உள்ள நமது சகோதரர்களுக்கு இடையே வெறுப்பை பரப்பி மக்கள் விரோத கொள்கைகள் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சீரழிக்க பாஜக நினைக்கிறது. டெல்லியிலிருது பாஜக இதை செய்கிறது என்றால் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்-உம் இதை செய்கிறது. இந்த இரு கட்சிகளுமே ஒன்றுதான். ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு கட்சிகளுமே அரசியல் கட்சிகள் கிடையாது.

பிசினஸ் செய்யும் கட்சிகள்
மாறாக பிசினஸ் செய்யும் கட்சிகள். எளிய மக்களை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால் பணக்காரர்களின் நலனில் தான் அக்கறை உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டது. பாஜக கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு சந்திரசேகர் ராவ் ஆதரவு அளித்தார். அடிப்படை விவசாய பொருட்களுக்கு கூட 18 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கபட்டுள்ளது" என்றார்.
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications