"உறுப்பை".. பிளேடால் அறுத்த பெண்.. கள்ளக்காதலன் சீரியஸா இருக்காராம்.. காரணம் கேட்டால் ஆடிபோயிடுவீங்க
ஆண் உறுப்பை பிளேடால் அறுத்த பெண்ணை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்
ஹைதராபாத்: பிளேடால் ஆண் உறுப்பை ஆத்திரத்தால் வெட்டிய பெண்ணை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட நபர் சீரியஸாக இருக்கிறாராம்..!!
சில வருடங்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு சம்பவம் நடந்தது.. கொல்லத்தை சேர்ந்தவர் அந்த சாமியார்.. பெயர் ஹரிசுவாமி.. இவரிடம் ஒரு பெண் உதவி கேட்டு சென்றுள்ளார்.
அதாவது இந்த பெண்ணின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.. அதனால், இந்த சாமியாரிடம் சென்று சரிபடுத்துமாறு சொல்லி உள்ளார்.

சூனியம்
உடனே சாமியார், அந்த பெண்ணின் வீட்டில் சூனியம் இருப்பதாகவும், அதனை எடுத்தால், உடனே பக்கவாதம் சரியாகிவிடும் என்றும் சொல்லி உள்ளார்.. பிறகு, அந்த பெண்ணின் வீட்டுக்கும் இது தொடர்பாக சென்று வந்துள்ளார்.. அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. தினமும் வீட்டுக்கு வந்து சென்றநிலையில், ஒரு கட்டத்தில் பெண்ணின் மகளை, அந்த சாமியார் பலாத்காரம் செய்துள்ளார்... ஆனால் அந்த மகள் சாதாரணவள் கிடையாது.. சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஆவார்.

ஓட்டைகள்
சாமியாரின் கொடுமையை மாணவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. போலீசுக்கு சென்றாலும், சட்டத்தின் ஓட்டையில் சாமியார் தப்பிவிடக்கூடும் என்பதால், தானே தண்டனை தர முடிவு செய்தார்.. அதற்காக, ஒரு பிளேடை எடுத்து, சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிவிட்டார்.. கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுப்பு அறுக்கப்பட்டிருந்தது.. அவரை உடனடியாக சிகிச்சையில் அனுமதித்தனர்.. ஆனால், உறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பிளேடு
கேரள முதல்வர் பினராயி விஜயனும் அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டினார்.. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மட்டும் இதற்கு கண்டனம் சொல்லியிருந்தார்.. சாமியாரால் பாதிக்கப்பட்ட அந்த பெண், சட்டத்தை கையிலெடுத்ததற்கு பதில் போலீசாரிடம் சென்றிருக்கலாம் என்று ஆலோசனை சொல்லியிருந்தாலும், இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. இப்போதும் ஒரு பெண் அதுபோலவே செய்துள்ளார்.. இவரும் போலீசுக்கு போகவில்லை.. ஒரு பெண், இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார் என்றாலும் இதை நியாயப்படுத்த முடியாது. காரணம் இவர் ஒரு கள்ளக்காதலி.

கல்யாணமாகிடுச்சு
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ண கணேஷ்... இவருக்கு கல்யாணமாகிவிட்டது.. ஆனாலும் ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்துள்ளது. கள்ளக்காதலியோ, கிருஷ்ண கணேஷை அதிகம் நம்பியிருந்தார்.. துரோகம் செய்ய மாட்டார் என்று நினைத்திருந்தார்.. கள்ளக்காதலி இப்படி தன்னை பற்றி நினைப்பது கிருஷ்ண கணேஷூக்கும் தெரியும்.. ஆனாலும், கிருஷ்ண கணேஷ் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஒருநாள் இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

பிளேடு
இத்தனை நாள் ஏமாந்து கிடந்தோமா என்று அதிர்ச்சி அடைந்த அந்த கள்ளக்காதலி, இதுகுறித்து கிருஷ்ண கணேஷிடம் கேட்டுள்ளார்.. இதுவே இவர்களுக்குள் தகராறாக உருவெடுத்துள்ளது.. இறுதியில் ஆத்திரம் அடங்காமல், மர்ம உறுப்பை பிளேடால் அறுத்துள்ளார் அந்த பெண். இதனால் கிருஷ்ண கணேஷ் அலறி துடிக்கவும், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ண கணேஷின் உறவினர்கள் அந்த பெண் மீது புகார் தந்துள்ளனர்.. ஆனால், அந்த பெண் இப்போது தலைமறைவாக இருப்பதால், போலீசார் தேடி வருகின்றனர்.. கிருஷ்ண கணேஷ் இப்போது சீரியஸாக இருக்கிறார்.. இதில் என்ன ஹைலைட் என்றால், இந்த பெண்ணுக்கும் கல்யாணமாகிவிட்டதாம். யார் செய்தாலும் துரோகம் துரோகம்தானே???












Click it and Unblock the Notifications