பரவாயில்லையே ஸ்டாலின் பேச்சுக்கு இத்தனை மதிப்பா?.. புதிய அரசு அமைய காங்கிரஸின் ஆதரவு கோரும் ராவ்!
Recommended Video
ஹைதராபாத்: மத்தியில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸின் ஆதரவையும் கோருவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் இரு கட்சிகள் பாஜக, காங்கிரஸ் ஆகியன ஆட்சியை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு கட்சிகளும் இல்லாமல் பிரதமர் பொறுப்பை மாநில கட்சிகளே ஏற்க வேண்டும் என்ற கொள்கையுடன் 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சந்திரசேகர ராவ் மாநில கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது தேசிய முற்போக்கு கூட்டணியில் நீங்கள் இணையலாமே என ஸ்டாலின் அழைப்பு விடுத்து ராவுக்கு ஷாக் கொடுத்தார்.

எம்பிக்கள்
இந்த நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை டிஆர்எஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரசூல்கான் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டாட்சி முன்னணிக்கு போதிய எம்பிக்கள் இல்லை என்றால் காங்கிரஸின் ஆதரவு கோரப்படும்.

உறுதி
ஆனால் அதே நேரத்தில் தலைமை பொறுப்பு காங்கிரஸுக்கு வழங்கப்படாது. மத்திய அரசை வழிநடத்தும் பொறுப்பு மாநில கட்சிகளிடமே இருக்க வேண்டும் என்பதில் ராவ் உறுதியாக இருக்கிறார்.

கூட்டாட்சி முன்னணி
பிரதமர் பதவி கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிகளுக்கே அளிக்கப்படும். கருத்து ஒற்றுமை அடிப்படையில் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படுவர். ஒரு வேளை காங்கிரஸுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கவில்லை என்றால் அந்த கூட்டணியில் திமுக இருந்து பலனில்லை.

ஆதரவு
அதனால் கூட்டாட்சி முன்னணிக்கு திமுக வர வாய்ப்புள்ளது என ரசூல்கான் தெரிவித்தார். முன்பு காங்கிரஸுக்கு எதிராக பேசி வந்த ராவ் தற்போது ஸ்டாலினுக்கு மதிப்புக் கொடுத்து காங்கிரஸ் ஆதரவு கோரப்படும் என கூறியுள்ளதாகவே கருதப்படுகிறது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications