அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு
டெல்லி: ஆந்திராவின் தலைநகர் குறித்து நீண்ட காலமாகவே குழப்பம் இருந்து வந்தது. இதற்கிடையே அனைத்து குழப்பங்களையும் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமராவதியை ஒரே தலைநகராக அங்கீகரிக்கும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்டம் நடந்து வருகிறது. அதில் பல்வேறு முக்கியமான மசோதாக்கள் குறித்து விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கிடையே மக்களவையில் இப்போது ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்தச் சட்டம், 2026 நிறைவேறியுள்ளது..

அமராவதி
இதன் மூலம் அமராவதி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மாநிலத்தின் தலைநகர் குறித்த பல ஆண்டுக்கால நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா, மார்ச் 28ம் தேதி முதலில் ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இது நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014இன் பிரிவு 5ஐ திருத்தக் கோரி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது..
மறுசீரமைப்பு சட்டம்
2014 மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகள் வரை ஹைதராபாத் பொதுவான தலைநகராகச் செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு எது தலைநகர் என்பது தெளிவாகக் கூறப்படாமல் இருந்தது. அதைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக ஹைதராபாத்திற்குப் பதிலாக அமராவதி செயல்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. 2024 ஜூன் 2ம் தேதி முதல் அமராவதி தலைநகராக இருக்கும் என்று முன் தேதியிட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் இது உள்ளடக்கியது.
முடிவுக்கு வரும் குழப்பம்
இது குறித்துப் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லவு கிருஷ்ணா, "இந்த மசோதா அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே தலைநகராக அங்கீகரிக்கிறது. இது மக்களுக்குத் தேவையான தெளிவையும் வழங்கும். முந்தைய அரசின் (ஜெகன் மோகன் அரசு) மூன்று தலைநகர் திட்டத்தை அறிவித்தது. அது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த குழப்பத்தைச் சரி செய்து, அமராவதியை மீண்டும் ஒரே தலைநகராக மீட்டெடுத்துள்ளோம்" என்றார்.
அமராவதி என்பது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம். அவர் முதல்வராக இருந்தபோது அமராவதியை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், இடையில் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அமராவதி திட்டத்தை அவரால் முடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது அமராவதிக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.
பின்னணி
சந்திரபாபு நாயுடு 2015ல் முதன்முதலில் அமராவதியை மாநிலத் தலைநகராக அறிவித்து, அதன் மேம்பாட்டிற்காக அதிக முதலீடு செய்திருந்தார். இடையில் 2019ல் ஆட்சிக்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, மூன்று தலைநகர் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றது. ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த திட்டத்தின்படி விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராக இருக்கும்.. அமராவதியில் சட்டமன்றத் தலைநகராகவும், கர்நூலில் நீதித்துறைத் தலைநகராகவும் இருக்கும். இருப்பினும், ஜெகன் திட்டத்திற்கு அப்போதே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்தச் சூழலில் தான் 2024ல் ஆந்திராவில் மீண்டும் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, அமராவதி மட்டுமே மீண்டும் ஒரே தலைநகராக இருக்கும் என அறிவித்தார்.. இதைத் தொடர்ந்து, மாநிலச் சட்டசபை மத்திய அரசிடம் சட்டப்பூர்வ தெளிவைக் கோரியது. இந்தத் திருத்தச் சட்டம், அமராவதி தான் தலைநகர் என்பதை உறுதி செய்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனத் தலைநகரை மாற்ற முடியாது.
-
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications