ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்யாணமாகி 10 நாள்தான் ஆச்சு.. அதற்குள் தூக்கில் தொங்கிய பூர்ணிமா.. ஹைதராபாத்தில் இன்னொரு சோகம்!

திருமணம் ஆன 10 நாளில் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கல்யாணம் ஆன புதுப்பெண் பூர்ணிமா, திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதனால் பூர்ணிமாவின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கிளம்பி உள்ளது.

ஹைதராபாத்தில் ஒரு பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் பெண் பூர்ணிமா.. இவரது நண்பர் கார்த்திக்.. நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது.

newly married woman committed suicide in hyderabad

இருவரும் சில மாதங்களாகவே உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டிலும் விஷயம் போனது.. பூர்ணிமாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்ப, கார்த்திக் வீட்டிலோ காதலுக்கு க்ரீன் சிக்னல் தந்தனர்.

பின்னர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி பூர்ணிமா கார்த்திகை 10 நாளைக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்.. பூர்ணிமா தரப்பில் ஒருவர்கூட இந்த கல்யாணத்துக்கு வரவில்லை.. இதனால், பூர்ணிமாவுக்கு மனசுக்குள் வருத்தம் இருந்து கொண்டே இருந்தது.

இந்தநிலையில், திடீரென கார்த்திக்கின் வீட்டில் பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. பூர்ணிமா இப்படி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோரிடமும் சொல்லப்பட்டது.

இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், 10 நாளுக்கு முன்பு கல்யாணம் ஆன மகள் எப்படி இறக்க முடியும்? மகளின் தற்கொலைக்கு கார்த்திக்கும், அவரது பெற்றோரும்தான் காரணம் என்று போலீசில் பூர்ணிமாவின் பெற்றோர் புகார் தந்தனர். இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.

உண்மையிலேயே பூர்ணிமா தற்கொலைதான் செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என்று விசாரித்து வருகிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்ட பெண் 10 நாளிலேயே இறந்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
newly married woman committed suicide in hyderabad and husband in police custody
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X