அந்த பதில் தான் முக்கியம்! தெலுங்கானாவில் சோனியா போட்டி? ரேவந்த் ரெட்டி சந்திப்பில் என்ன நடந்தது?
ஹைதராபாத்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி தெலுங்கானாவில் இருந்து போட்டியிடுகிறாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியிடம் தெலுங்கானாவில் போட்டியிட வலியுறுத்திய நிலையில் அவர் கூறிய பதில் தான் இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணமாக உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகளை வென்ற நிலையில் வரும் தேர்தலில் 3 இலக்கத்தில் தொகுதிகளை வெல்ல வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டு வியூகம் வகுத்து வருகிறது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் 2014ல் உருவான பிறகு முதல் 2 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் இப்போது முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவை வீழ்த்தி முதல் முறையாக அரியணை ஏறி உள்ளது. அம்மாநில முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை மதல்வர் மல்லு பட்டி விக்ரமார்க்கா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் ரெட்டி உள்ளிட்டவர்கள் நேற்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணம் மற்றுமு் ரூ.10 லட்சம் சுகாதார திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்தனர். மேலும் சிலிண்டரை ரூ.500க்கு வழங்குவது மற்றும் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
இதுமட்டுமின்றி வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதாவது சோனியா காந்தி தெலுங்கானாவில் இருந்து போட்டியிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதி உள்ளதால் ஏதாவது ஒரு தொகுதியில் களமிறங்க வேண்டும். இதன்மூலம் காங்கிரஸ் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு உருவாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை கேட்ட சோனியா காந்தி, ‛‛சரியான நேரத்தில் இதுபற்றி முடிவு எடுத்து சொல்கிறேன்'' என அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் போட்டியிட உள்ளாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. . சோனியா காந்தி இப்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கிறார். முன்னதாக சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவருக்கு உடல்நல பிரச்சனை உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா மூலம் எம்பியாகலாம் என்ற தகவல் வெளியானது.
இருப்பினும் சோனியா காந்தியை போட்டியிட வைக்கும் முனைப்பில் காங்கிரஸ் தலைவர்கள் அவரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானது. இதனால் நீங்கள் நிச்சயம் போட்டியிட வேண்டும். நீங்கள் போட்டியிடாவிட்டால் அதனையே பாஜக பெரிய பிரசாரமாக முன்னெடுக்கும் எனக்கூறி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தெலுங்கானாவில் இருந்து போட்டியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியிடம் வலியுறுத்தி உள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications