ராகுல் காந்தி ரெடியாகிட்டாரு.. கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி டீமுடன் மோதும் தெலுங்கானா முதல்வரின் அணி!
ஹைதராபாத்: அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் தான் இன்று இரவு ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அணிக்கும், மெஸ்ஸியின் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது. இதற்காக ராகுல் காந்தி ஹைதராபாத் செல்ல உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
கால்பந்து ஜாம்பவனாக இருக்கிறார் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளன. கடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது.

அடுத்த ஆண்டு ஜூன் 11ல் மீண்டும் உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் 3 நாள் சுற்றுப்பயணமாக லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு நள்ளிரவில் வந்திறங்கினார். கொல்கத்தாவில் இன்று நடக்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். அதன்பிறகு இன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்கிறார்.
மாலை 4 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்துக்கு அவர் செல்கிறார். அங்கு மெஸ்ஸிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு அங்குள்ள ராஜிவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நட்பு ரீதியலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அணியும், மெஸ்ஸி அணியும் பங்கேற்க உள்ளது. ரேவந்த் ரெட்டியின் அணிக்கு ரேவந்த் ரெட்டியின் பெயரில் உள்ள முதல் 2 ஆங்கில எழுத்தான ஆர்ஆர் என்பதை சேர்த்து ‛ஆர்ஆர்9' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது மெஸ்ஸி அணிக்கு ‛மெஸ்ஸி 10' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்காக ரேவந்த் ரெட்டி கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். இந்த போட்டியையொட்டி ராகுல் காந்தி, அவரது தங்கை பிரியங்கா காந்தி ஹைதராபாத்துக்கு செல்கின்றனர். ராகுல் காந்தி கால்பந்து பிரியர். ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தின்போது சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி இருக்கிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி பார்வையாளராக தனது தந்தை பிரியங்கா காந்தியுடன் ஹைதராபாத் செல்ல உள்ளார்.
இந்த போட்டியை காண மொத்தம் 39 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுற்றி 2,500 போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications