வாக்குப்பதிவு எந்திரங்களை ரஷ்யா ஹேக் செய்கிறது.. பெரிய சதி நடக்கிறது.. சந்திரபாபு நாயுடு புகார்!
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ரஷ்யா முறைகேடு செய்து இந்திய லோக்சபா தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ரஷ்யா முறைகேடு செய்து இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுக்க முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடந்தது.
இந்த தேர்தல் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார். மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆந்திரா எப்படி
ஆந்திராவில் தேர்தல் நடந்த போது மொத்தம் 89,000 வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்தது. பல முக்கிய இடங்களில் இந்த பிரச்சனை நடந்தது. ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார். பிற மாநில தேர்தலிலும் இப்படி நடக்க வாய்ப்புள்ள்ளது என்று அவர் கூறி இருந்தார்.

பேட்டி என்ன
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ரஷ்யா இயக்கி வருவதாக எனக்கு தகவல்கள் வருகிறது. வேறு ஒரு இடத்தில் இருந்து நவீன தொழில்நுட்பம் மூலம் ரஷ்யா இந்த எந்திரங்களை இயக்கி வருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இதை குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

ஒரு தொகுதி
ஒரு தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்ய ரூ.5 கோடியில் இருந்து 10 கோடி வரை பணம் கொடுக்க வேண்டும் என்று நிலை இருக்கிறது. அப்படி பணம் கொடுத்தால் தேர்தலில் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று எனக்கு தகவல் வருகிறது. ரஷ்யா இதை வைத்துதான் ஒவ்வொரு நாடுகளையும் கட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள்.

ரஷ்யா காரணம்
இது உண்மையா, பொய்யா என்று எனக்கு தெரியாது. ஆனால் இதுகுறித்து உடனே விசாரிப்பதுதான் சரியாக இருக்கும். நம் நாட்டின் நிலைமை தற்போது சரியாக இல்லை. இந்த வாக்குப்பதிவு எந்திர பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications