காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பா? விடுவோமா? மோடி தலைமையில் பாஜகவின் ’தெலுங்கானா படையெடுப்பு’!
ஹைதரபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அக்டோபர் 1-ந் தேதி பிரதமர் மோடி தொடங்க உள்ளார். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் பிரசாரம் களைகட்டி வருகிறது.
தெலுங்கானாவின் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி ஏற்கனவே மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களமிறக்கிவிட்டது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை அண்மைய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தெலுங்கானாவில் வெல்வோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார்.

காங்கிரஸ் நம்பிக்கை: தெலுங்கானா தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு மாதம ரூ2,500 உதவித் தொகை, அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவசம் உள்ளிட்டவைகளை மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுத்ததைப் போல இந்த பார்முலா ஒர்க் அவுட் ஆகும் என்பது அக்கட்சியின் நம்பிக்கை.
அக்டோபர் 1-ல் பிரசாரம்: இந்நிலையில் தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி அக்டோபர் 1-ந் தேதி தொடங்க உள்ளார். தெலுங்கானாவின் மெக்பூப்நகர் புறநகர் பகுதியான பூத்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்ளிட்டோரும் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவும் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்துக்காக முன்னர் நலகொண்டா, நிஜாமாபாத், மக்பூபாபாத் ஆகிய இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில் மக்பூப் நகர் புறநகரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நலத் திட்டங்கள் அறிவிப்பு?: பிரதமர் மோடியின் அக்டோபர் 1-ந் தேதி பொதுக் கூட்டத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் நலத் திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தெலுங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி, நீண்டகாலமாக பாஜகவின் பி டீம் என்ற முத்திரையை சுமந்து கொண்டிருந்தது. அதற்கேற்ப "இந்தியா" கூட்டணியிலும் இடம் பெறவில்லை. தற்போது பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். அரசை காட்டமாக விமர்சிப்பாரா? அல்லது வழக்கம் போல காங்கிரஸை வறுத்தெடுப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications