ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விவகாரம்:தமிழகம், கேரளா வரிசையில் தெலுங்கானா முதல்வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு
ஹைதராபாத்: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிகளுக்கு மாற்றுவதற்கான ஆட்சி பணி அதிகாரிகள் விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியம். ஆனால் மாநில அரசுகளின் இந்த வீட்டோ அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு, ஆட்சிப் பணி அதிகாரிகள் விதிகளில் திருத்தம் கொண்டுவர உள்ளது.

மத்திய அரசு கடிதம்
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு இதுவரை 3 கடிதங்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மேலும் மத்திய அரசுப் பணிகளுக்கு செல்ல தயாராக உள்ள அதிகாரிகளின் பட்டியலையும் கேட்டிருந்தது மத்திய அரசு. அத்துடன் மாநில அரசுகள் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் அதனை கவனத்தில் கொள்ளப் போவது இல்லை என்கிற குறிப்பையும் சேர்த்து அனுப்பி வைத்திருந்ததாம் மத்திய அரசு.

மாநிலங்கள் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு மமதா பானர்ஜி முதலில் கடிதம் அனுப்பினார். கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என கூறியிருந்தார் மமதா. இதேபோல் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் இதனை எதிர்த்திருந்தார். ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து இதர மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன என கவலை தெரிவித்திருந்தார் உமர் அப்துல்லா.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பது மாநிலங்களின் முதல்வர்களின் கருத்து. மத்திய அரசின் இந்த விதிகள் திருத்த நடவடிக்கை மாநில சுயாட்சிக்கு எதிரானது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

தெலுங்கானாவும் எதிர்ப்பு
தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள கூட்டாட்சி தத்துவ நடைமுறைக்கு எதிரானது மத்திய அரசின் இந்த திருத்த நடவடிக்கை. அத்துடன் மத்திய அரசின் இந்நடவடிக்கையானது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கட்டமைப்பையே சீர்குலைக்கும். ஆகையால் இந்த திருத்த நடவடிக்கையை தெலுங்கானா அரசு கடுமையாக எதிர்க்கிறது என சந்திரசேகர ராவ் குறிப்பிட்டுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications