தலைகீழாக தொங்கிய தெலங்கானா முதல்வர் மகன் கேடி ராமராவ்! பிரசார வேனில் இருந்து விழுந்ததால் பரபரப்பு
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலையொட்டி அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமராவ் சென்று கொண்டிருந்த பிரசார வாகனத்தின் மேல்புறத்தில் இருந்து திடீரென கீழே விழுந்து தலைகீழாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வீடியோ வெளியாகி வருகிறது.
தெலங்கானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. தற்போது அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் உள்ளார்.

2014ல் ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது. இதையடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 2018 ல் நடந்த தேர்தலில் மீண்டும் சந்திரசேகரராவ் கட்சி வெற்றி பெற்றது. சந்திரசேகரராவ் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
தற்போது தெலங்கானா சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
तेलंगाना के मंत्री और #BRS के नेता केटीआर राव निज़ामाबाद जिले के आर्मूर में एक चुनावी रैली के दौरान वाहन से गिरे।pic.twitter.com/MquTwq2ldK
— Ambuj Mishra (@Ambujmishra9090) November 9, 2023
தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று சந்திரசேகர ராவ் ஹாட்ரிக் சாதனை படைக்க முயன்று வருகிறார். ஆனால் இதனை தடுக்கும் வகையில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியை பிடிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. இது அந்த கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
இருப்பினும் சந்திரசேகரராவ் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தான் சந்திரசேகரராவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமராவ் தற்போது சிர்சிலா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் இவர் மீண்டும் சிர்சிலா தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தனது தொகுதி உள்பட மாநிலம் முழுவதும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் கேடி ராமராம் தெலங்கானாவில் உள்ள ஆர்மூர் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பிரசார வாகனத்தின் மேல் அவர் மற்றும் நிர்வாகிகள் நின்று மக்களை பார்த்து கையசைத்து சென்றனர். இந்த வேளையில் திடீரென்று டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது வாகனத்தின் மீது நின்ற கேடி ராமராவ் உள்பட பலர் பிடித்திருந்த இரும்பு தடுப்பு முறிந்தது.
இந்த வேளையில் முன்வரிசையில் நின்ற கேடி ராமராவ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக கேடி ராமராவை அவரின் பின்னால் இருந்த பாதுகாவலர் பிடித்து கொண்டார். அதனால் அவர் வாகனத்தில் இருந்து கீழே விழாமல் தொங்கியபடி கிடந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications