தெலங்கானாவில் காங்கிரசுக்கு தனிமெஜாரிட்டி! கேசிஆருக்கு ஷாக்! டிவி 9 கருத்து கணிப்பு ரிசல்ட் இதோ
ஹைதராபாத்: தெலங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ்-பிஆர்எஸ் கட்சிகள் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வரும் டிவி 9 சார்பில் சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முக்கிய முடிவுகள் வெளியாகி உள்ளது.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சி தான் 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் TV9 Bharatvarsh, Pollstrat சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக் 63 முதல் 79 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி அரியணை ஏற உள்ளது.
மாறாக தற்போது ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ் கட்சி 31 முதல் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். இதன்மூலம் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி தெலங்கானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியிடம் இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 2 முதல் 4 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என அந்த கட்சியினர் கூறி வரும் நிலையில் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கி உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications