கேம் ஓவர்.. தெலங்கானாவில் கேசிஆருக்கு செக்! ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்! டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 70 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ்நவ்-இடிஜி சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் 10 ஆண்டுகளாக நடந்த முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வர உள்ளது.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சி தான் 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் டைம்ஸ்நவ்-இடிஜி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தனி மெஜாரிட்டிக்கு 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது இந்த கருத்து கணிப்பில் உறுதியாகி உள்ளது.
மாறாக தற்போது ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ் கட்சி 37 முதல் 45 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாஜக 6 முதல் 8 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
********












Click it and Unblock the Notifications