போடுறா வெடிய!. தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி! கேசிஆர் ஷாக்! இந்தியா டிவி எக்ஸிட்போல்
ஹைதராபாத்: தெலங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தான் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சி தான் 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கு பிந்யைத கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் படி காங்கிரஸ் கட்சி 63 முதல் 79 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பிஆர்எஸ் கட்சி 31 முதல் 47 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் பாஜக, 2 முதல் 4 தொகுதிகளில் வெல்லும் எனவும் ஓவைசியின் ஏஐஎம்எம்ஐ கட்சி 5 முதல் 7 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்தியா டிவி -சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி குறைந்தது 63 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 79 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications