தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி.. அதிகாரத்தை இழக்கும் கேசிஆர்.. C PAC கருத்து கணிப்பில் பரபர தகவல்
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என C PAC சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு உதயமானது. இதையடுத்து 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் 2 சட்டசபை தேர்தல்கள் நடந்தது. இந்த 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் (முன்பு டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் சந்திரசேகரராவ் முதல்வரானார்.
சந்திரசேகரராவ் தற்போது 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தான் இன்று 3வது முறையாக தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 63.94 சதவீத ஓட்டுகள் பதிவானது.

தெலங்கானாவை பொறுத்தமட்டில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. C PAC சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவில் காங்கிரஸ் கட்சி தான் தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மெஜாரிட்டிக்கு 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக தற்போது அதிகாரத்தில் உள்ள பிஆர்எஸ் கட்சி 41 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர பாஜக 4 இடங்களிலும், ஓவைசியின் கட்சி 5 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என C PAC சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளள நிலையில் பிஆர்எஸ் தலைவர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். இருப்பினும் எக்ஸிட்போல் முடிவுகள் எப்படி இருந்தாலும் கூட பிஆர்எஸ் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications